என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alaska"

    • 112 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கட்ட சுமார் 8 பில்லியன் டாலர்கள் செலவாகும்
    • எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சுரங்கம் அமைக்கும் நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' மூலம் அமைக்கலாம்

    ரஷியாவுக்கும் அமேரிக்காவின் அலாஸ்காவுக்கும் இடையே பேரிங் ஜலசந்தி அமைந்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவையும் ரஷியாவையும் இணைக்கும் வகையில், பேரிங் ஜலசந்திக்கு அடியில் 'புதின் -டிரம்ப்' ரெயில் சுரங்கப்பாதையைக் கட்ட ரஷியாவின் தூதர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

    ரஷிய அதிபர் புதினின் முதலீட்டுத் தூதரும், தேசிய செல்வ நிதியத்தின் தலைவருமான கிரில் டிமிட்ரிவ் இந்த சுரங்கப்பாதை யோசனையை முன்வைத்தார்.

    இது இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமையின் சின்னமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ரெயில்கள் செல்ல ஏதுவாக 112 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கட்ட சுமார் 8 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும், இதை எட்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கலாம் என்றும் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

     

    மேலும் இந்தச் சுரங்கப்பாதையை அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சுரங்கம் அமைக்கும் நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' மூலம் அமைக்கலாம் என்று கிரில் டிமிட்ரிவ் தனது சமூக ஊடகத்தில் பரிந்துரைத்துள்ளார்.

    ரஷிய தூதரின் இந்த கருத்து குறித்த என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ரஷியாவில் இருந்து அலாஸ்காவிற்கு ஒரு சுரங்கப்பாதை!.. இதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன். இது சுவாரஸ்யமான யோசனை. இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

     

    அதேசமயம் நேற்று போர் நிறுத்தம் குறித்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பின்போது, இந்த யோசனை குறித்து டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கேட்டார்.

    அதற்கு ஜெலென்ஸ்கி, "இந்த யோசனையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று பதிலளித்தார்.

    அடுத்த இரண்டு வாரங்களில் உக்ரைன் போர் நிறுத்தம் ரஷிய அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில் இந்த 'புதின்-டிரம்ப் சுரங்கப்பாதை' குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    • அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ட்ரேசி ஆர்ம் என்ற பகுதி உள்ளது.

    இங்கு மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு மலையின் ஒரு பெரிய பகுதி கடலில் சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 100 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமான சுனாமி அலைகள் உருவாகி கடற்கரை பகுதிகளை மூழ்கடித்தன.

    இது ஒரு அரிய மற்றும் பயங்கரமான புவியியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கானது முதல் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.

    • கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    ஜூனோ:

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் இருந்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’ என்கிற சொகுசு கப்பல் சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கடந்த சனிக்கிழமை வான்கூவரில் இருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த கப்பல் நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கெட்சிகன் நகரை வந்தடைந்தது. அங்கு தரையிலும், கடலிலும் தரையிறங்கும் வசதி கொண்ட சிறிய ரக கடல் விமானங்கள் மிகவும் பிரபலமானவை.

    இந்த வகை விமானங்கள் மூலம், சுற்றுலா பயணிகளை அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

    இதில் ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர். இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதின. இந்த கோரவிபத்தில் 11 பேருடன் சென்று கொண்டிருந்த முதல் விமானத்தில் ஒருவர் உயிர் இழந்தார். மற்ற 10 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அதே போல் மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    படுகாயம் அடைந்த 10 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாயமான 2 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 
    அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #StateofEmergency #AlaskaEarthquake
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



    இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவும் இதற்கான செலவினங்களை தங்குதடையின்றி ஒதுக்கீடு செய்யவும் இந்த உத்தரவு துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #StateofEmergency #AlaskaEarthquake 
    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake
    வாஷிங்டன்:

    கனடா நாட்டின் வடமேற்கில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அந்நாட்டு மக்களில் அதிகமானவர்கள் வாழும் இடமாக அறியப்படுகிறது.

    இந்நிலையில், இம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) பின்னிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.



    இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சில மணி நேரத்துக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake 
    வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #AlaskaEarthquake
    வாஷிங்டன்:

    வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை. 

    கடந்த 1995-ல் வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    அலாஸ்கா அருகே சர்வதேச வான்வெளியில் பறந்த ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #USfighterjets #Russianbombers
    அலாஸ்கா:

    அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் அமைந்துள்ளது. சர்வதேச வான்வெளியில் அமைந்துள்ள இப்பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு டியூ-19 வகை போர் விமானங்கள் நேற்று பறந்து சென்றுள்ளன.

    அவற்றை அமெரிக்காவின் நோராட் எப்-22 ரக போர் விமானங்கள் நடுவழியிலேயே இடைமறித்துள்ளது. அதைத்தொடர்ந்து வான் பாதுகாப்பு பகுதியை விட்டு  ரஷ்ய போர் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக வட அமெரிக்க விமான பாதுகாப்பு செய்திதொடர்பாளர் மேஜர் ஆன்ரூவ் ஹென்னெசி தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கடந்த ஆண்டு மே 3-ம்தேதி ரஷ்ய விமானத்தை அமெரிக்க போர் விமானம் வழிமறித்து திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. #USfighterjets #Russianbombers
    ×