என் மலர்
நீங்கள் தேடியது "general election"
- காலை 10 மணியளவில் தேயிலைத் தோட்டத்திற்குள் சடலத்தை உள்ளூர்வாசிகள் கண்டுள்ளனர்
- கொலை தேர்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தகவல்
வங்கதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், நேற்றும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டு உள்ளார். மவுல்விபசார் மாவட்டம் சம்பா பகுதியில், தேயிலை தோட்டத்தில் ரத்தன் சஹு வாகர்(வயது 28) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இவர் கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டறியப்பட்டுள்ளார். அவரது உடலில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பேசியுள்ள ரத்தன் சஹு வாகரின் சகோதரர்,
"முந்தைய இரவு முதல் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தோம். இன்று காலை, அவரது உடல் தோட்டத்தில் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்று அவரை அடையாளம் கண்டோம். அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை," என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம்தான் மைமென்சிங் மாவட்டத்தில் 62 வயதான அரிசி வியாபாரி சுசென் சந்திர சர்க்கார் என்பவர் தனது கடைக்குள்ளேயே மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தேர்தலுக்காக நாடு முழுவதும் 43,000 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12-ம் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. 350 இடங்களைக் கொண்ட வங்கதேச பாராளுமன்றத்தில் 300 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளன.
இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்கதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
தேர்தலில் 1,981 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதையடுத்து வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்காள தேசத்தில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும், அரசின் நிர்வாக அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் 'ஜூலை சாசனம்' என்ற சீர்திருத்தத் தொகுப்பு குறித்த பொது வாக்கெடுப்பும் நடக்கிறது.
350 இடங்களை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 300 இடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார முறையில் தேர்வு செய்யப்படும்.
தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டும், சீர்திருத்தங்கள் குறித்த வாக்கெடுப்பிற்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளன.
இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்காளதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
தேர்தலில் 1,981 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நாளை காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.
- நாட்டின் மொத்த 330 நகரங்களில், 67 நகரங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் டிசம்பர் 28, ஜனவரி 11 மற்றும் ஜனவரி 25 என மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவ ஆதரவுப் பெற்ற யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி வெற்றிப் பெற்றதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது, மாற்றுக்கருத்துக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டது, மேலும், நாடாளுமன்றத்தின் 25% இடங்கள் ராணுவத்திற்காக தானாகவே ஒதுக்கப்பட்டிருந்தது போன்றவற்றால் இந்தக் கட்சியின் வெற்றி என்பது முன்னரே எதிர்பார்க்கபட்டதுதான் என கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் (NLD) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற சில மாதங்களில் 2021-ல் மியான்மரில் ராணுவப் புரட்சி வெடித்தது. இதனைத்தொடர்ந்து இராணுவத்தால் ஆட்சி கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி, தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு நடந்த தேர்தலில் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. மேலும் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடையும் விதிக்கப்பட்டது. நாட்டின் மொத்த 330 நகரங்களில், 67 நகரங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனால் 664 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தின் அசல் இடங்களின் எண்ணிக்கை 586-ஆகக் குறைந்தது.
தேர்தலில் 57 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4,800-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும், ஆறு கட்சிகள் மட்டுமே நாடு தழுவிய அளவில் போட்டியிட்டன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி கட்டத் தேர்தலில், கீழவைக்கான மொத்தம் 61 இடங்களில் 57 இடங்களை USDP கட்சி வென்றுள்ளதாக அந்தக் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலவை மற்றும் பிராந்திய சட்டமன்றங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து அந்த கட்சிக்கு குறைந்தபட்சம் 290 இடங்கள் கிடைக்கும். இதன்படி, ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 166 இடங்களுடன் சேர்த்து, இவ்விரண்டும் 450-க்கும் அதிகமான இடங்களைக் கொண்டிருக்கும். இது அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 294 இடங்களை விட மிக அதிகமாகும். அனைத்து இடங்களுக்குமான இறுதி முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களும் ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்களும் மூன்று வேட்பாளர்களை முன்மொழிவார்கள்; பின்னர் அவர்களில் ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள். மற்ற இருவரும் துணை அதிபர்களாவார்கள். தற்போதைய ராணுவ அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங், அதிபர் பதவியைப் பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலை ஒரு "ஏமாற்று வேலை" (sham) என்றும், இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜப்பானில் பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
- சனே தகைச்சிக்கு மக்களிடையே 70 சதவீதம் ஆதரவு உள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபரில் பதவியேற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டகாய்ச்சி உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், ஜப்பானிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்தார். அங்கு பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
- பிப்ரவரி 8, 2026 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
- சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அந்நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை கலைத்துவிட்டு பிப்ரவரி 8 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
கடந்த அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்ற சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
- இராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன.
- ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் (NLD) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற சில மாதங்களில் 2021-ல் மியான்மரில் ராணுவப் புரட்சி வெடித்தது. இராணுவத்தால் ஆட்சி கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி, தற்போது சிறையில் உள்ளார்.
ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் ஜனவரி 11 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். அதேநேரத்தில் 65 நகரங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இதில் இராணுவ ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி (USDP) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலை ஒரு "ஏமாற்று வேலை" (sham) என்றும், இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்றும் விமர்சித்துள்ளன. ஆனால் ரஷ்யா, சீனா, பெலாரஸ், கஜகஸ்தான், கம்போடியா, வியட்நாம், நிகரகுவா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தலை மேற்பார்வையிட நேற்றே மியான்மருக்கு சென்றனர்.
- ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது.
- கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.
தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிறார்.
கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்தோணி அல்பானீஸ் அமைச்சரானார். ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த அவர் கெவின் ரூட்டின் குறுகியபதவிக் காலத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.
2019 ஆம் ஆண்டு எதிர்பாராத தோல்விக்குப் பிறகு அவர் தொழிலாளர் கட்சியின் தலைவரானார். பத்து ஆண்டுகால லிபரல்-தேசிய கூட்டணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 2022 இல் அவர் பிரதமரானார்.
- அதன்படி சிங்கப்பூரில் இன்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
- ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
சிங்கப்பூரில் இன்று பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இதில், 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி சிங்கப்பூரில் இன்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது.
அதேவேளையில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கப்படும்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது.
மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
- 93 இடங்களில் 83 இடங்களில் PAP வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.
- சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும்.
1965 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2020 இல் நடந்த தேர்தலில் PAP கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த்தாலும் அதன் வாக்கு வங்கி முன்பு எப்போதும் இல்லாததை விட 61 சதவீதம் ஆக சரிந்தது.
மொத்தம் உள்ள 93 இடங்களில் 83 இடங்களில் PAP வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தாலும், எதிர்கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6 இல் இருந்து 10 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேண்டி இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஏப்ரல் 23 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும். இந்த தேர்தலிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கடந்த தேர்தலில் மக்களிடையே நிலவிய அதிருப்தியை சரிக்கட்ட தற்போதைய பிரதமரும் PAP கட்சியின் தலைவருமான லாரன்ஸ் வோங் திட்டமிட்டுள்ளார்.
அதிருப்தியடைந்த இளம் வாக்காளர்களிடையே கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களைக் கொண்டு செல்ல கட்சி வியூகம் வகுத்து வருகிறது. வரும் தேர்தலில் 30 புதுமுகங்களைக் களமிறக்க வோங் திட்டமிட்டுள்ளார்.
- இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது.
- கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
எதிர்ப்புக்கு மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்த அவர் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில், கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று எச்சரித்தார். மேலும் ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியா, காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுடன் கசப்பான உறவை கொண்டுள்ளதால் தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என கனடா கணித்துள்ளது.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை எதிர்ப்பதற்கும் அதன் மூலோபாய நோக்கங்காக, கனடா பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடக்கூடும் என்று கனடா தெரிவித்துள்ளது.
- ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
- கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பும்.
கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும் எதிர்ப்பு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
தொடர்ந்து கனடா பாராளுமன்றத்தை முன்கூட்டியே களைத்த பிரதமர் மார்க் கார்னி, ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஞாயிறு அன்று அறிவித்தார்.
இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளராகளை சந்தித்து பேசுகையில் இந்தியா மற்றும் சீனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கனடாவில் உள்ள இன, கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அதேபோல், ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் கனடாவின் ஜனநாயக நடைமுறைக்கு இது பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்புள்ளதாக 2023இல் அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதன் பின் கனடா - இந்தியா உறவில் ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கனடாவின் தற்போதைய குற்றச்சாட்டுக்கு, இந்தியா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.







