search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shoot"

    • படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டம்.
    • டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார்.

    யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்ஷா நடிக்கும், திரைப்படம் "ஃபேமிலி படம்". இந்த படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

    ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை எண்டர்டெயினர் படமாக அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் உருவாக்குகிறார். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இப்படத்தில் டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கேபி நந்து கலை இயக்கம் செய்கிறார். ஆர் சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.

    படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டியூன்டின் விமான நிலையத்தில் இன்று கேட்பாரற்று கிடந்த மர்ம பார்சலால் ஏற்பட்ட பீதியை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது. #Suspiciouspackage #Dunedinairport #Dunedinairportclosed
    வெலிங்டன்:

    நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் ஒட்டாகோ துறைமுகத்தையொட்டி டியூன்டின் என்னும் சிறிய நகரம் அமைந்துள்ளது. சுமார் 1.25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரின் விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல் பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வாசல் பகுதியில் (உள்நாட்டு நேரப்படி) இன்றிரவு சுமார் 8 மணியளவில் ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசாரும், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். விமான நிலையத்தின் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் நகரில் இருந்து டியூன்டின் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரு விமானங்கள் அருகாமையில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இங்கிருந்து செல்ல வேண்டிய சுமார் 300 பயணிகளுக்கு நாளை மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்தில் சோதனை நடப்பதால் அருகாமையில் இருக்கும் 86-வது தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரு மசூதிகளில் சமீபத்தில் இரு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உட்பட சுமார் 50 பேர் உயிரிழந்த நிலையில் இன்று விமான நிலையத்தில் காணப்பட்ட மர்ம பார்சல் செய்தி அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #Suspiciouspackage #Dunedinairport #Dunedinairportclosed
    நியூசிலாந்தில் 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் வங்காளதேச வீரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தமிம்இக்பால் தெரிவித்துள்ளார். #NZMosqueAttack #tamimiqbal

    கிறிஸ்ட்சர்ச்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குவதாக இருந்தது.

    இந்த நிலையில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட இந்த சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். தொழுகைக்காக திரண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக அந்த மசூதிக்கு சென்றனர். நல்ல வேளையாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இதை தொடர்ந்து 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வங்காளதேச பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறியதாவது:-

    இந்த சம்பவத்தில் வங்காள தேச வீரர்கள் அனைவருமே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். என்னால் இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தற்போது ஓட்டலில் நலமாக உள்ளோம்.


    சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம்தான் நாங்கள் இருந்தோம். இது ஒரு மோசமான பயங்கரம் நிறைந்த அனுபவம் ஆகும். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #NZMosqueAttack #tamimiqbal

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். #FloridaShotting
    மாஸ்கோ:

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் பிரவுன்ஸ்வில்லே பகுதியில் வீட்டு உபயோகப் பொருள் கடையில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர், திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினான்.

    இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஆசாமி ஓடிவிட்டான். இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறையையும் கவலை அடையச் செய்துள்ளது. #FloridaShotting
    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் ஆலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். #US #Maryland #RiteAid
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மேரிலான்ட் மாநிலத்தில் உள்ள ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து உற்பத்தி ஆலை செயல்படுகிறது. உள்ளூர் நேரப்படி வியாழன் காலை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளான்.

    மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 1000 பணியாளர்கள் அங்கு இருந்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்குள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் இரண்டு முதியவர்களை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் வல்ஹல்லாவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் மருத்துவமனைக்குள் உள்ளூர் நேரப்படி இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் 70 வயது மிக்க இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொலையாளி பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×