என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "immigration"

    • கி.மு. 722-ல் அசிரியப் பேரரசு இஸ்ரேலைத் தாக்கியது.
    • இஸ்ரேலின் காணாமல் போன பழங்குடியினரின் சந்ததியினர்

    இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சுமார் 5,800 பினே மெனாஷே சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தற்போது மொத்தமாக தங்களின் 'வாக்களிக்கப்பட்ட பூமி'யான இஸ்ரேலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.

    யார் இந்த பினே மெனாஷே?

    இவர்கள் தங்களை விவிலியக் கதைகளில் வரும் இஸ்ரேலின் பத்து காணாமல் போன பழங்குடிகளில் ஒன்றான 'மெனாஷே' வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

    விவிலியத்தின்படி, கி.மு. 722-ல் அசிரியப் பேரரசு இஸ்ரேலைத் தாக்கியபோது, அங்கிருந்த 12 பழங்குடியினக் குழுக்களில் 10 குழுக்கள் சிதறிப் போய் வரலாற்றில் இருந்து மறைந்தன.

    அதில் ஒரு பிரிவினர் ஆப்கானிஸ்தான் வழியாக வடகிழக்கு இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    வடகிழக்கு இந்தியாவின் குக்கி-சோ இனக்குழுவின் ஒரு பகுதியினராக இருந்த இவர்கள், 1951இல் முறையாகத் தங்களை யூதர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்பு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வந்தனர்.

    2005-ஆம் ஆண்டில், இஸ்ரேலின் தலைமை ராபி இவர்களை இஸ்ரேலின் காணாமல் போன பழங்குடியினரின் சந்ததியினர் என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

    தற்போது சுமார் 5,000 பினே மெனாஷே மக்கள் ஏற்கனவே இஸ்ரேலில் வசித்து வருகின்றனர்.

    மீதமுள்ள 5,800 பேரையும் 2030-ஆம் ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கு அழைத்து வர இஸ்ரேல் அமைச்சரவை கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புதல் அளித்தது.

    இந்த திட்டத்துக்கு அரசு, 27 மில்லியன் டாலர் (சுமார் ரூ.225 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது.

    தங்கள் நம்பிக்கைப்படி, 2,700 ஆண்டுகால நாடுகடத்தலுக்குப் தாய்நாட்டிற்குத் திரும்பும் இந்த குடியேற்றத்தை இம்மக்கள் 'அலியா' என்று அழைக்கின்றனர்.

    இவர்கள் இஸ்ரேலின் வடக்கு பகுதியான கலிலீ பகுதியில் குடியமர்த்தப்பட உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் அச்சத்தால் இப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில், அந்தப் பகுதியை மீண்டும் மேம்படுத்தவே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

    இவர்களுக்கான விமானக் கட்டணம், எபிரேய மொழி வகுப்புகள் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை இஸ்ரேல் அரசு கவனித்துக் கொள்ளும். இவர்கள் 2026 முதல் 2030-க்குள் படிப்படியாக இஸ்ரேல் சென்றடைவார்கள்.

    தற்போது பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இவர்களின் இடப்பெயர்வு குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
    • அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர்.

    அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இச்சோதனையில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மினசோட்டா மாகாணத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மின்னபொலிஸ் நகரில் போராட்டம் தீவிரமாக உள்ளது. அங்கு கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.

    அவர் அதிகாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மின்ன பொலிஸ் நகரில் வாலிபர் ஒருவரை குடியேற்ற துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். குடியேற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி(வயது 37) என்ற வாலிபர் தனது செல்போனில் அதிகாரிகளை வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர். இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

    அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி தன்னிடம் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது, "மின்ன பொலிஸ் நகரில் ஒரு கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அதிகாரிகளை அணுகினார். அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் அதிகாரிகளை தாக்கினார். அப்போது அதிகாரி ஒருவர் தற்காப்புக்காகச் சுட்டார்" என்று தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது,குடியேற்ற துறை அதிகாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் மினசோட்டர் கவர்னர், மேயர் ஆகியோர் கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    ஆனால் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டியிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    வாலிபர் சுட்டுக் கொல்லப் பட்டதை யடுத்து மினசோட்டாவில் போராட் டங்கள் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    • சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது.

    இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில் லண்டனில் பிரமாண்ட பேரணி நடந்தது.

    சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் 26 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகிய வற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

    மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ , அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
    • மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.

    வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

    தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், "வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

    தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
    • இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.

    இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.

    ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனி சுவீடனில் தங்க விரும்புபவர்கள் அங்கு வேலை தேடி கொள்ள வேண்டும்
    • சுவீடிஷ் மொழியில் தேர்வு பெற்றாக வேண்டும் என்கிறது புதிய நடைமுறை

    ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் எல்லைகளை தாண்டி செல்ல ஒரே விசா முறையான ஷென்கன் விசா (Schengen Visa) நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் (Sweden) நாடும் அங்கீகரித்து வந்தது.

    சுற்றுலா தவிர, சுவீடனில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும், அங்கு தங்கி பணியாற்றவும் பல நாடுகளிலிருந்து அங்கு மக்கள் செல்கின்றனர். ஆனால், தற்போது சுவீடன் அரசாங்கம் தங்கள் நாட்டில் குடி புக நினைக்கும் அனைத்து அயல்நாட்டினருக்கும் புதிய சட்டதிட்டங்களை வகுக்க உள்ளது.

    சுவீடனின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிவித்திருப்பதாவது:

    சுவீடனில் தங்க விரும்புபவர்கள் இங்கு தாங்களாகவே வேலையை தேடி கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரும் அரசாங்க உதவி இல்லாமல் தங்களை தேவைகளை தாங்களே பார்த்து கொள்ள முடியும். சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூக குறியீடுகளை குறித்த புரிதல் இருக்க வேண்டும் என்பதும் இனி கட்டாயம். சுவீடன் நாட்டு மொழியான சுவீடிஷ் (Swedish) மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர். அதற்காக ஒரு தேர்வு நடத்தப்படும். இங்கு தங்கி பணியாற்ற விரும்புபவர்கள் ஒவ்வொருவரின் "சமுதாய புரிதல்" குறித்து ஒரு ஆய்வாளரின் அறிக்கை பெறப்படும். இங்கு கல்வி கற்று, பிறகு வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "சுவீடனுக்கு அனவைரையும் வரவேற்கிறோம். ஆனால், எங்கள் சட்டதிட்டங்கள் இனி இதுதான். சுவீடிஷ் மொழியை கற்று எங்கள் சமூகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து படித்து புரிதல் கொண்டவர்கள் மட்டுமே இங்கு வர வேண்டும்" என சுவீடனின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜோகன் பெர்சன் (Johan Pehrson) தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன், ஃபாஸ்ட் டிராக் (fast track) எனப்படும் "விரைவு பரிசீலனை" முறையில் வழங்கப்பட்டு வந்த விசா வழங்கலை சுவீடன் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்துவேன் என்று டிரம்ப் தெரிவித்தார்
    • டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    இவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான குடியேறிகள் மீது கடுமையான போக்கை டிரம்ப் கையாண்டார்.

    தொடர்ந்து அமைந்த ஜோ பைடன் ஆட்சியில் சற்று தளர்வான சூழல் நிலவிய நிலையில் தற்போது டிரம்ப் மீண்டும் பதவியேற்றுள்ளது விஷயத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார்.

     

    சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்சிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ட்ரூத் என்ற சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், 'அது உண்மைதான்' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

     

    அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

    ×