என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய குடியேற்றம்"
- பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
- இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.
தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
- இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.
இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிக மக்கள் குடியேறுவதால் உள்கட்டமைப்பு சிக்கல்கள் அதிகரித்தன
- 2025 ஜூன் மாதத்திற்குள் தற்போது உள்ள அனுமதி பாதியாக குறைக்கப்படும்
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைகழகங்களில் கல்வி பயிலவும், அங்கேயே தங்கி பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றவும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் காலம் காலமாக அங்கு செல்வது வழக்கம்.
சமீப காலங்களில் அங்கு செல்ல விரும்பி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிதாகியது. மேலும் இதனால் பல உள்கட்டமைப்பு சிக்கல்களும் எழுந்தன. இது அந்நாட்டு குடிமக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் க்ளேர் ஓ நெய்ல் (Clare O'Neil) புதிய குடியேற்ற சட்டதிட்டங்கள் குறித்து அறிவித்தார்.
"கடந்த ஜூன் 2023 வருட கணக்கின்படி 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர். பழைய குடியேற்ற சட்ட விதிகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அவை தேவையற்று காலதாமதம் ஏற்படும் வகையிலும், போதுமான பலன் அளிக்காத வகையிலும் இருந்தது. எனவே, ஒரு பெரும் மாற்றம் தேவைப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்குள் குடியேறுவோர் எண்ணிக்கை இனி படிப்படியாக குறைக்கப்பட்டு 2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும். சர்வதேச மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் கல்வி பயில்வதற்காக நடத்தப்படும் பிடிஈ (PTE) தேர்வில் ஆங்கில புலமைக்கான தேர்வு இன்னும் கடினமாக்கப்படும். ஒரு முறை அங்கு கல்வி பயின்றவர்கள் இரண்டாம் முறை கல்விக்காக அனுமதி கோரும் போது பரிசீலனைகள் கடுமையாக்கப்படும்" என க்ளேர் தெரிவித்தார்.
தற்போதைய தரவுகளின்படி சர்வதேச மாணவர்கள் சுமார் 6 லட்சத்திற்கும் மேல் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






