என் மலர்
நீங்கள் தேடியது "international students"
- அதிக மக்கள் குடியேறுவதால் உள்கட்டமைப்பு சிக்கல்கள் அதிகரித்தன
- 2025 ஜூன் மாதத்திற்குள் தற்போது உள்ள அனுமதி பாதியாக குறைக்கப்படும்
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைகழகங்களில் கல்வி பயிலவும், அங்கேயே தங்கி பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றவும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் காலம் காலமாக அங்கு செல்வது வழக்கம்.
சமீப காலங்களில் அங்கு செல்ல விரும்பி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிதாகியது. மேலும் இதனால் பல உள்கட்டமைப்பு சிக்கல்களும் எழுந்தன. இது அந்நாட்டு குடிமக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் க்ளேர் ஓ நெய்ல் (Clare O'Neil) புதிய குடியேற்ற சட்டதிட்டங்கள் குறித்து அறிவித்தார்.
"கடந்த ஜூன் 2023 வருட கணக்கின்படி 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர். பழைய குடியேற்ற சட்ட விதிகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அவை தேவையற்று காலதாமதம் ஏற்படும் வகையிலும், போதுமான பலன் அளிக்காத வகையிலும் இருந்தது. எனவே, ஒரு பெரும் மாற்றம் தேவைப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்குள் குடியேறுவோர் எண்ணிக்கை இனி படிப்படியாக குறைக்கப்பட்டு 2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும். சர்வதேச மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் கல்வி பயில்வதற்காக நடத்தப்படும் பிடிஈ (PTE) தேர்வில் ஆங்கில புலமைக்கான தேர்வு இன்னும் கடினமாக்கப்படும். ஒரு முறை அங்கு கல்வி பயின்றவர்கள் இரண்டாம் முறை கல்விக்காக அனுமதி கோரும் போது பரிசீலனைகள் கடுமையாக்கப்படும்" என க்ளேர் தெரிவித்தார்.
தற்போதைய தரவுகளின்படி சர்வதேச மாணவர்கள் சுமார் 6 லட்சத்திற்கும் மேல் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளது.
- தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ‘இ-ஸ்டூடண்ட்’ விசா அளிக்கப்படும்.
புதுடெல்லி:
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக 'இ-ஸ்டூடண்ட்', 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' என்ற 2 சிறப்பு பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டடி இன் இந்தியா' என்ற இணையதளத்தையும் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், முதலில் அந்த இணையதளம் மூலமாக, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிப்பது கட்டாயம் ஆகும். அதற்கான சேர்க்கை கடிதம் கிடைத்த பிறகு, அவர்கள் விசாவுக்கு அதற்கான இணையதளத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட்' விசா அளிக்கப்படும். அவர்களை சார்ந்தவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' விசா அளிக்கப்படும். படிப்பின் கால அளவை பொறுத்து, 5 ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும். அதன்பிறகு அதை நீட்டித்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






