search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elina Svitolina"

    • ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த 17-ம் நிலை வீரரான லாரன்சோ முசட்டியை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-3 , 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்னொரு ஆட்டத்தில் 5-ம் நிலையில் உள்ள ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா சுவிட்டோலினா 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த 9-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 28-வது வரிசையில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற 51-ம் நிலை வீராங்கனையான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார். மழையால் தடைப்பட்டு நடந்த இந்த ஆட்டம் 2 மணி 14 நிமிடம் நீடித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.

    வெற்றிக்கு பிறகு அஸரென்கா அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. மழையால் ஆட்டம் பல முறை தடைப்பட்டு நடந்தது. ஒட்டுமொத்தத்தில் இது உயர்தரமான போட்டியாக இருந்தது. என்னுடைய செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி தொடரில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார். இதேபோல் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நவ்மி ஒசாகா, எலீனா சுவிட்டோலினா ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #AustralianOpen2019 #NaomiOsaka #ElinaSvitolina
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நான்காம் நிலை வீராங்கனையான நவ்மி ஒசாகா (ஜப்பான்)- சுலெஸ்டானா (லாத்வியா) மோதினார்கள்.

    இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த முறை 4-வது சுற்று வரை நுழைந்ததே இதற்கு முன்பு சிறந்ததாக இருந்தது.

    ஒசாகா கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும். எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்சை 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    சுவிட்டோலினா தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சுவிட்டோவா (செக்குடியரசு)- பேர்ட்டி (ஆஸ்திரேலியா), அனஸ்டசியா (ரஷியா)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    இன்னொரு கால்இறுதியில் மோதும் வீராங்கனை விவரம் இன்று பிற்பகல் தெரியும்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா)- மெட்வதேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.

    மற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்)- பஸ்டா (ஸ்பெயின்), கோரிக் (குரோஷியா)- லுகாஸ் பவுலி (பிரான்ஸ்) மோதுகிறார்கள். #AustralianOpen2019 #NaomiOsaka #ElinaSvitolina
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். ரூ.17¼ கோடி பரிசுத்தொகையையும் பெற்றார். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
    சிங்கப்பூர்:

    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக வர்ணிக்கப்படும் இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மல்லுகட்டினர்.



    முதலாவது செட்டில் 2-வது கேமில் ஸ்விடோலினாவின் சர்வீசை முறியடித்த ஸ்டீபன்ஸ் அதன் தொடர்ச்சியாக முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் சுடச்சுட பதிலடி கொடுத்த ஸ்விடோலினா மூன்று முறை எதிராளியின் சர்வீசை ‘பிரேக்’ செய்து அந்த செட்டை தனக்கு சாதகமாக மாற்றினார். கடைசி செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்விடோலினாவின் கை ஓங்கியது. பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாக செய்யக்கூடிய தவறுகளை ஸ்டீபன்ஸ் அதிகமாக (48 முறை) செய்ததால், பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

    2 மணி 23 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து முதல்முறையாக இந்த பட்டத்தை உச்சிமுகர்ந்தார். 46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்த கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்த தொடரில் ஸ்விடோலினா தோல்வியே சந்திக்கவில்லை. 2013-ம் ஆண்டு செரீனா வில்லியம்சுக்கு பிறகு தோல்வி பக்கமே செல்லாமல் வாகை சூடிய வீராங்கனை ஸ்விடோலினா தான். 24 வயதான ஸ்விடோலினாவின் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பட்டம் இதுவாகும். ‘இது எனக்கு சிறப்பு வாய்ந்த தருணமாகும். எனது செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. இந்த வெற்றி நிறைய நம்பிக்கையை கொடுக்கும்’ என்று ஸ்விடோலினா பெருமிதத்துடன் கூறினார். போட்டி கட்டணம், லீக்கில் ஒவ்வொரு வெற்றிக்குரிய பரிசு என்று எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் ரூ.17¼ கோடியை ஸ்விடோலினா பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த ஸ்டீபன்சுக்கு ரூ.8¾ கோடி கிட்டியது.



    இந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறுகிறார். ஸ்டீபன்ஸ் ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடிக்கிறார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதலிடத்தில் தொடருகிறார்.

    இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் டைமியா பாபோஸ் (ஹங்கேரியா)- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ ஜோடியும், விம்பிள்டன் சாம்பியனுமான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-கேத்ரினா சினியகோவா இணையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. இவர்களுக்கு ரூ.3½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு இந்த போட்டி சீனாவின் ஷின்ஜென் நகருக்கு மாற்றப்படுகிறது. அத்துடன் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்படுகிறது.
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
    சிங்கப்பூர்:

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் உக்ரைனின் ஸ்விடோலினா 7-5, 6-7 (5), 6-4 என்ற செட் கணக்கில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அரைஇறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மல்லுகட்டினார். இதில் முதல் 8 கேம்களை வரிசையாக கைப்பற்றிய பிளிஸ்கோவா எளிதில் வெற்றி காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஸ்டீபன்ஸ் எழுச்சி பெற்று மிரள வைத்தார். 1 மணி 55 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 0-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். 
    ×