search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarter-finals"

    • ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கான என்.பி.எல். (நிப்ட்-டீ பிரிமியா் லீக்) கிரிக்கெட் போட்டிகள் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் கடந்த ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    கால் இறுதிப் போட்டிகளுக்கு குரூப் ஏ பிரிவில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ், போஸ் எக்ஸ்போா்ட்ஸ், குரூப் பி பிரிவில் ரிதம் நிட்டிங், ஸ்ரீவாரி கிளாத்திங் கம்பெனி, குரூப் சி பிரிவில் சி.ஆா்.காா்மெண்ட்ஸ் (ஈகில்ஸ்), குவாண்டா் நிட்ஸ் கியூ 3 (கேபிஆா்), குரூப் டி பிரிவில் சி.ஆா்.காா்மெண்ட்ஸ் (டைகா்ஸ்), எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

    • ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த 17-ம் நிலை வீரரான லாரன்சோ முசட்டியை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-3 , 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்னொரு ஆட்டத்தில் 5-ம் நிலையில் உள்ள ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா சுவிட்டோலினா 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த 9-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 28-வது வரிசையில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் ஆண்கள் ரிசர்வ் பிரிவில் இந்திய அணி வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நடந்த வில்வித்தை ஆண்கள் ரிசர்வ் பிரிவில் இந்திய அணி வியட்னாமை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-3 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதேபோல பெண்கள் அணியும் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 5-3 என்ற கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தியது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இன்று காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக்வர்மா- ஜோதி சுரேகா ஆகியோரை கொண்ட இந்திய அணி கால்இறுதிக்கு முந்தை சுற்றில் ஈராக் அணியுடன் மோதியது.

    இதில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை நடக்கிறது.

    ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அட்னு தாஸ்- தீபிகா குமாரி ஜோடி 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியா ஜோடியிடம் தோற்று வெளியேறியது. #AsianGames2018
    அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். #VenusWilliams
    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார்.



    இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 38 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 2 செட்டிலும் முதலில் முன்னிலை பெற்றாலும் அதனை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் மரியா சக்காரி, அமெரிக்க வீராங்கனை டானிலே காலின்சை சந்திக்கிறார். #VenusWilliams
    உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, சிந்து, பிரனீத் உள்ளிட்டோர் கால்இறுதிக்கு முன்னேறினர். மற்றொரு முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். #WorldBadmintonChampionships2018
    நான்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 4-ம் நிலை வீராங்கனையான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். ஆக்ரோஷமாக ஆடிய சாய்னா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் முதல் செட்டை 22 நிமிடங்களில் வசப்படுத்தினார்.

    இரண்டாவது செட்டிலும் ஆரம்பத்தில் சாய்னாவின் கை ஓங்கி நின்றாலும், அதன் பிறகு முன்னாள் சாம்பியனான இன்டானோன் சரிவை சமாளித்தார். ஒரு கேம் 32 ஷாட் வரை நீடித்ததால், ரசிகர்கள் பரவசமடைந்தனர். 19-19 என்று சமனுக்கு கொண்டு வந்த இன்டானோன் அதன் பிறகு, பந்தை வெளியிலும், வலையிலும் அடுத்தடுத்து அடித்து தவறிழைத்தார். இதனால் 2-வது செட்டும் சாய்னாவின் வசம் ஆனது.

    47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். சாய்னா அடுத்து ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) மல்லுகட்ட இருக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய புயல் பி.வி.சிந்து 21-10, 21-18 என்ற நேர் செட்டில் சுங் ஜி யென்னை (தென்கொரியா) சாய்த்தார். இதில் 2-வது செட்டில் சிந்து ஒரு கட்டத்தில் 11-13 என்று பின்தங்கி இருந்த போதிலும் எழுச்சி பெற்று எதிராளியை அடக்கினார்.

    42 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சிந்து கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். இவரிடம் தான் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து இறுதி ஆட்டத்தில் நீண்ட ‘யுத்தம்’ நடத்தி தோற்று இருந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பம் சிந்துவுக்கு கனிந்துள்ளது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் ஹான்ஸ் கிறிஸ்டியனை (டென்மார்க்) விரட்டியடித்தார். சாய் பிரனீத் கால்இறுதியில் ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார். அதே சமயம் 6-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 18-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் டாரன் லீவ்விடம் வீழ்ந்தார். இதே போல் 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை சக நாட்டவர் ஷி யுகி 21-15, 21-9 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் கோ சூன் ஹியாட்- ஷிவோன் ஜெமி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது. #WorldBadmintonChampionships2018
    ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மிலொஸ் ராவ்னிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஏழாம் நிலை வீரரான மிலொஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். 

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் ராவ்னிக், பெடரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் பெடரர் இரண்டாவது செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றினார். 



    இதன்மூலம் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெடரர் வெற்றி பெற்றதால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், நான்காம் நிலை வீரரான நிக் கிர்கியோசை எதிர்கொண்டார். 

    இப்போட்டியின் முதல் செட்டை கிர்கியோஸ் 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்து கொண்ட பெரடர் இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் அந்த செட்டையும் பெடரர் 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார். இதன்மூலம்  6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட்கணிக்கில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மிலொஸ் ராவ்னிக் - லூகாஸ் பவுல்லி ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில் ராவ்னிக் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் - மிலொஸ் ராவ்னிக் பலப்பரீட்சை செய்கின்றனர். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #NickKyrgios #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் குயிடோ பெல்லாவை எதிர்கொண்டார். 

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பெடரர் இரண்டாவது செட்டையும் 604 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெடரர் வெற்றி பெற்று அரைறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு காலிறுதி சுற்று ஆட்டத்தில் நான்காம் நிலை வீரரான நிக் கிர்கியோஸ், ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபஸ் உடன் மோதினார். இப்போட்டியில் கிர்கியோஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர் - நிக் கிர்கியோஸ், மிலொஸ் ராவ்னிக் - லூகாஸ் பவுல்லி ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #RogerFederer #NickKyrgios #StuttgartOpen2018
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #StuttgartOpen2018

    ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வரேவ்வை எதிர்கொண்டார். 

    இப்போட்டியின் முதல் செட்டை ஸ்வரேவ் 6-3 என கைப்பற்றினார். அதன்பின் பெடரர் சுதாரித்துகொண்டு சிறப்பாக விளையாடினார். அவர் அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான லூகாஸ் பவுல்லி, ஜெர்மனியின் ருடோல்ப் மோலேகர் உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பவுல்லி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். #RogerFederer #StuttgartOpen2018
    இத்தாலி ஓபன் டென்னிசில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறினர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



    சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது.  #RafaelNadal #SimonaHalep
    ×