என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "quarter-finals"
- ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
- ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
திருப்பூர் :
திருப்பூா் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கான என்.பி.எல். (நிப்ட்-டீ பிரிமியா் லீக்) கிரிக்கெட் போட்டிகள் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் கடந்த ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
கால் இறுதிப் போட்டிகளுக்கு குரூப் ஏ பிரிவில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ், போஸ் எக்ஸ்போா்ட்ஸ், குரூப் பி பிரிவில் ரிதம் நிட்டிங், ஸ்ரீவாரி கிளாத்திங் கம்பெனி, குரூப் சி பிரிவில் சி.ஆா்.காா்மெண்ட்ஸ் (ஈகில்ஸ்), குவாண்டா் நிட்ஸ் கியூ 3 (கேபிஆா்), குரூப் டி பிரிவில் சி.ஆா்.காா்மெண்ட்ஸ் (டைகா்ஸ்), எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
- ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
- கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த 17-ம் நிலை வீரரான லாரன்சோ முசட்டியை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-3 , 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
இன்னொரு ஆட்டத்தில் 5-ம் நிலையில் உள்ள ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா சுவிட்டோலினா 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த 9-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் 28-வது வரிசையில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதேபோல பெண்கள் அணியும் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 5-3 என்ற கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தியது. #AsianGames2018
இதில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை நடக்கிறது.
ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அட்னு தாஸ்- தீபிகா குமாரி ஜோடி 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியா ஜோடியிடம் தோற்று வெளியேறியது. #AsianGames2018
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 38 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 2 செட்டிலும் முதலில் முன்னிலை பெற்றாலும் அதனை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் மரியா சக்காரி, அமெரிக்க வீராங்கனை டானிலே காலின்சை சந்திக்கிறார். #VenusWilliams
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 4-ம் நிலை வீராங்கனையான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். ஆக்ரோஷமாக ஆடிய சாய்னா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் முதல் செட்டை 22 நிமிடங்களில் வசப்படுத்தினார்.
இரண்டாவது செட்டிலும் ஆரம்பத்தில் சாய்னாவின் கை ஓங்கி நின்றாலும், அதன் பிறகு முன்னாள் சாம்பியனான இன்டானோன் சரிவை சமாளித்தார். ஒரு கேம் 32 ஷாட் வரை நீடித்ததால், ரசிகர்கள் பரவசமடைந்தனர். 19-19 என்று சமனுக்கு கொண்டு வந்த இன்டானோன் அதன் பிறகு, பந்தை வெளியிலும், வலையிலும் அடுத்தடுத்து அடித்து தவறிழைத்தார். இதனால் 2-வது செட்டும் சாய்னாவின் வசம் ஆனது.
47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். சாய்னா அடுத்து ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) மல்லுகட்ட இருக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய புயல் பி.வி.சிந்து 21-10, 21-18 என்ற நேர் செட்டில் சுங் ஜி யென்னை (தென்கொரியா) சாய்த்தார். இதில் 2-வது செட்டில் சிந்து ஒரு கட்டத்தில் 11-13 என்று பின்தங்கி இருந்த போதிலும் எழுச்சி பெற்று எதிராளியை அடக்கினார்.
42 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சிந்து கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். இவரிடம் தான் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து இறுதி ஆட்டத்தில் நீண்ட ‘யுத்தம்’ நடத்தி தோற்று இருந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பம் சிந்துவுக்கு கனிந்துள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் ஹான்ஸ் கிறிஸ்டியனை (டென்மார்க்) விரட்டியடித்தார். சாய் பிரனீத் கால்இறுதியில் ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார். அதே சமயம் 6-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 18-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் டாரன் லீவ்விடம் வீழ்ந்தார். இதே போல் 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை சக நாட்டவர் ஷி யுகி 21-15, 21-9 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் கோ சூன் ஹியாட்- ஷிவோன் ஜெமி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது. #WorldBadmintonChampionships2018
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது. #RafaelNadal #SimonaHalep
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்