search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.பி.எல்.,  கிரிக்கெட் கால் இறுதிப்போட்டிகளுக்கு 8 அணிகள் தகுதி
    X

    கோப்புபடம்.

    என்.பி.எல்., கிரிக்கெட் கால் இறுதிப்போட்டிகளுக்கு 8 அணிகள் தகுதி

    • ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கான என்.பி.எல். (நிப்ட்-டீ பிரிமியா் லீக்) கிரிக்கெட் போட்டிகள் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் கடந்த ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் கால் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    கால் இறுதிப் போட்டிகளுக்கு குரூப் ஏ பிரிவில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ், போஸ் எக்ஸ்போா்ட்ஸ், குரூப் பி பிரிவில் ரிதம் நிட்டிங், ஸ்ரீவாரி கிளாத்திங் கம்பெனி, குரூப் சி பிரிவில் சி.ஆா்.காா்மெண்ட்ஸ் (ஈகில்ஸ்), குவாண்டா் நிட்ஸ் கியூ 3 (கேபிஆா்), குரூப் டி பிரிவில் சி.ஆா்.காா்மெண்ட்ஸ் (டைகா்ஸ்), எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    Next Story
    ×