என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலி ஓபன்"

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

    இதில் 7-6 (7-1) என முதல் செட்டை இழந்த பவுலினி, அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-3 என வென்றார். 2வது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 4வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் முசெட்டி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதனால் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள டேனில் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா ஒசாகா வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பொடபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் டுஜான் லஜோவிக் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் கேமரூன் நூரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ஸ்விட்சர்லாந்தின்விக்டோரிஜா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த நவோமி ஒசாகா அடுத்த இரு செட்களை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் எலிஸ்பெட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் பவுலா படோசா விலகினார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோத இருந்தார்.

    அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

    பவுலா படோசா தரவரிசையில் 10-வது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கானல் உடன் மோதினார்.

    இதில் நூரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் 2வது சுற்றில் கேமரூன் நூரி, ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதுகிறார்.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் பிரான்செஸ்கோ பாஸாரோ-மேட்டியோ அர்னால்டி ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆரம்பம் முதலே போபண்ணா ஜோடி அபாரமாக செயல்பட்டது. இறுதியில், போபண்ணா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்ஸ் வீரர் முல்லருடன் மோதினார்.

    இதில் முல்லர் 3-6 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய முல்லர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரூப்லெவ் வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் டாமி பால் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரரான மெத்வதேவ் வெளியேறினார். ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×