என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் ஸ்வரேவ், மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் ஸ்வரேவ், மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, பிரேசிலின் ஹதாத் மையா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பிரேசில் வீராங்கனை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிக்ஸ் ஆகர் அடுத்த 3 செட்களை 7-6 (9-7), 6-4, 6-4 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 3 வீரரான ஸ்வரேவ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×