என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெலிக்ஸ் அகர் அலியாசிம்"

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
    • 3-வது சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் வெற்றி பெற்றார்.

    துரின்:

    உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

    அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய கனடா வீரர் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ், ஸ்பெயினின் அல்காரஸ் உடன் மோதுகிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலிக்ஸ் அகர் அலியாசிம், டாமி பாலுடன் மோதினர்.
    • இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.

    அடிலெய்டு டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா வீரரான பெலிக்ஸ் அகர் அலியாசிம், அமெரிக்காவின் டாமி பாலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை பெலிக்ஸ் அகர் கைப்பற்றி வெற்றி பெற்றார். பெலிக்ஸ் இந்த ஆட்டத்தில் 7-6, 3-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா- மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    அடிலெய்டு:

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.

    இதில் அலியாசிம் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    ×