என் மலர்
நீங்கள் தேடியது "school boy"
- பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது
- குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில், வீட்டுப்பாடம் முடிக்காததால் 4 வயது மாணவன் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் நகரில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளி திங்கள்கிழமை காலை வழக்கம்போல திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வந்தநிலையில், நர்சரி வகுப்பில் ஆசிரியர் காஜல் சாஹு வீட்டுப்பாடங்களை சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அதில் ஒரு மாணவன் மட்டும் வீட்டுப்பாடத்தை முடிக்காநிலையில், அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் மற்றொரு ஆசிரியரின் உதவியோடு மாணவனின் சட்டையில் கயிற்றால் கட்டி, பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் அவனை தொங்கவிட்டுள்ளார். நான்கு வயது சிறுவன் மணிக்கணக்கில் மரத்தில் தொங்கிய நிலையில், அழுது, கூச்சலிட்டுள்ளான். குழந்தையின் அழுகுரலை அலட்சியப்படுத்திய ஆசிரியர் அங்கேயே நின்றுள்ளார். இதனை அருகில் இருந்த வீடியோ எடுத்துள்ளார். அதனை தடுக்க முயன்றுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளி
இருப்பினும் அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து வட்டார கல்வி அதிகாரி (BEO) டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) அஜய் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளி நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உள்ளூர்வாசிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ஹான்ஸ் எனப்படும் போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகல் குளத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த செயலை செய்தது தெரிய வந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவனுக்கு, சில வாலிபர்கள் சேர்ந்து ஹான்ஸ் எனப்படும் போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை வைத்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகல் குளத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் சேர்ந்து, அந்த சிறுவனுக்கு போதை மருந்தை வழங்கியது தெரிய வந்துள்ளது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெர்மோண்ட் மாகாண கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறான். கவர்னர் தேர்தலில் சிறுவன் போட்டியிடுவது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கலாம்.
ஆனால் வெர்மோண்ட் மாகாண மக்கள் இதை சகஜமாக எடுத்துக் கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட திட்டங்கள் திருத்தப்பட்டன. அதன்படி இங்கு போட்டியிட வயது வரம்பு தேவையில்லை. வெர்மோண்ட் மாகாணத்தில் 4 ஆண்டுகள் குடியிருந்தால் மட்டும் போதும்.
தேர்தலில் போட்டியிடும் எதான் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இணையதளம் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறான்.
சுகாதார மேம்பாட்டு சீரமைப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்து இருக்கிறான்.
இவனை எதிர்த்து கிறிஸ்டினே ஹாஸ்குவஸ் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். மூத்த கடற்படை வீரர் ஜேம்ஸ் ஹெலர்ஸ் மற்றும் பிரன்டா சீகல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னா நகரைச் சேர்ந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன், மேற்குவங்காளம் மாநிலம், குளுகுளு பிரதேசமான டார்ஜீலிங்கில் உள்ள மிகப்பிரபலமான உறைவிடப் பள்ளியில் தங்கியவாறு நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்று இரவு உணவு வேளையின் போது சிறுவனை காணாத விடுதி காப்பாளர், அவனது அறைக்கு தேடிச் சென்றார். அப்போது, அந்த அறையின் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் தூக்கில் அவன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த காப்பாளர், உடனடியாக தூக்கில் இருந்து சிறுவனை கழற்றி, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி, சிலுகுரியில் உள்ள வடக்கு வங்காளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள சாத்தியமில்லை எனவே இந்த வழக்கை கொலை என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் போலீசாரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தரமான கல்வியைத் தேடி, பீகார் மாநிலத்தில் இருந்து மேற்குவங்காளம் வந்து படித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
பிறகு அங்குள்ள ஒரு “காய்ன் போனில்” ஒரு ரூபாயை எடுத்து போலீஸ் கண்ட்ரோல் எண் 100-க்கு அடித்தான். மறுமுனையில் ஹலோ.. என்று சத்தம் கேட்டதும் மாணவன், “காசிபாளையம் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிலர் பேசியதை நான் கேட்டேன் அதற்காகத்தான் பேன் பண்ணினேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான்.
இதை கேட்டு பதட்டம் அடைந்த போலீசார் காசிபாளையம் ஊருக்குள் புகுந்து பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திடீரென ஊருக்குள் இவ்வளவு போலீசார் புகுந்து என்ன தேடுகிறார்கள்? என பொதுமக்களும் பதட்டம் அடைந்தனர்.
பல மணி நேர அதிரடி விசாரணைக்கு பிறகு வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் கூறியது புரளி என தெரிய வந்தது.
பிறகு அதே பள்ளி மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். அவனது தாயார் வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தனது தாயாரின் செல்போனை எடுத்து மீண்டும் 100-க்கு அடித்தான்.
இந்த தடவை அந்த போன் கால் சென்னை போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு சென்றது. போனில் பேசிய மாணவன். “முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருக்காங்க” என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டான்.
இதை கேட்டதும் பதட்டம் அடைந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் சொன்னதும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அது புரளி என தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் போனில் பேசியது யார்? என்று செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த போன் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இருந்து வந்தது என தெரிய வந்தது. உடனே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கோபி போலீசாருக்கும் அருகே உள்ள கடத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கோபி மற்றும் கடத்தூர் பகுதி போலீசார் நடத்திய விசாரணையில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பிடித்தனர்.
பிறகு போலீசார் அந்த மாணவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.
அந்த மாணவனிடம் எஸ்.பி, “எதற்காக இப்படி போனில் பேசினாய்?” என்று கேட்க விளையாட்டுக்காத்தான் இப்படி பேசினேன்.. என்று மிரண்டபடி.. பயந்து கொண்டே கூறினான்.
“படிக்கும் வயசில் இப்படியெல்லாம் போனில் பேசினால் பெரிய விபரீதம் ஆகும் தெரியுமா.. இல்லையா? இப்படியெல்லாம் போனில் பேச கூடாது” என எஸ்.பி. எச்சரித்தார்.
மேலும் அவனது பெற்றோருக்கும் எஸ்.பி.சக்தி கணேசன் எச்சரித்து அறிவுரை கூறினார்.
படிக்கும் பையனிடம் செல்போன் கொடுத்தால் இப்படிதான் நடக்கும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அவரிடம் கோவை கோகுலம் காலனி இந்திரா நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒரு மனு அளித்தார்.
நான் கோவை முல்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.
பண கஷ்டம் காரணமாக என்னால் இந்த வருடம் கல்வி கட்டணத்தை மொத்தமாக செலுத்த முடியவில்லை. எனது தந்தை மாத மாதம் கட்டி விடுகிறேன் என கூறினார். ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை ஏற்கவில்லை. எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிவிட்டனர். அதன் பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர அனுமதி கேட்டோம்.
அவர் பி.என். புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசி அவரை சந்தித்து சேர்ந்து கொள்ளும் படி கூறினார். ஆனால் மாநகராட்சி தலைமை ஆசிரியை என்னை சேர்த்து கொள்ள மறுத்துவிட்டார்.
எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிய தனியார் பள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






