search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore collector"

    • மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
    • திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

    திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

    திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும் விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம்-9442999120, தாசில்தார்கள் வேலூர்-9445000508, காட்பாடி-9445000510. குடியாத்தம்-9445000509, பேர்ணாம்பட்டு-9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் 26 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பிரகாசம், வாணியம்பாடி நகர வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ராஜ்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், சிப்காட்-பனப்பாக்கம் திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த தியாகராஜன், வாணியம்பாடி அம்பலூருக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் கவுரிசங்கர், ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் அரிதாஸ், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இந்துமதி, கலவைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் காந்தி, ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராகவும், குடியாத்தம் (கிழக்கு) வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த சிவசங்கரன், கணியம்பாடி வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ரேவதி, வேலூர் கலெக்டர் அலுவலக ‘ஜி’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த இந்துமதி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் உள்பட மாவட்டம் முழுவதும் 26 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ராமன் பிறப்பித்துள்ளார்.
    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். #Plasticban
    வேலூர்:

    ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது.

    இதுதொடர்பாக இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தியாளர்கள், சில்லரை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் சுழற்சி செய்ய ஏதுவாக அமையும்.

    இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு 044-22353153, 8056042121 என்ற எண்ணிலும், மாவட்ட அலுவலகத்திற்கு 0416-2242700, 8056042130, 04174-234831, 8056042184 என்ற எண்ணிலும், WWW.Plasticpollutionfreetn.org என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக அரசால் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்கு வதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Plasticban
    வேலூரில் அறைக்கு பூட்டுப்போட்ட சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சரஸ்வதி என்பவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர், சரியாக பணிக்கு வருவதில்லை, குழந்தைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்குவதில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில், சரஸ்வதி பி.எம்.செட்டி தெருவில் உள்ள சத்துணவு மையத்துக்கு கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டார். சரஸ்வதிக்கு பதிலாக, பவானி என்பவர் மக்கான் பகுதியில் உள்ள மையத்திற்கு நியமிக்கப்பட்டார்.

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட சரஸ்வதி, தான் ஏற்கனவே வேலை பார்த்த அம்பேத்கர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று பவானியை பணிசெய்யவிடாமல் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறையை பூட்டி விட்டு, அதன் சாவியை எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி மற்றும் அதிகாரிகள் மக்கான் பகுதியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்றனர்.

    அப்போது சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறை பூட்டப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பூட்டை உடைத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை எடுத்து சமையல் செய்யப்பட்டது.

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியின் செயல்பாடுகள் குறித்தும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    அதன்பேரில் சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியை கலெக்டர் ராமன் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவனுக்கு மாற்று சன்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நீக்கிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அவரிடம் கோவை கோகுலம் காலனி இந்திரா நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒரு மனு அளித்தார்.

    நான் கோவை முல்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.

    பண கஷ்டம் காரணமாக என்னால் இந்த வருடம் கல்வி கட்டணத்தை மொத்தமாக செலுத்த முடியவில்லை. எனது தந்தை மாத மாதம் கட்டி விடுகிறேன் என கூறினார். ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை ஏற்கவில்லை. எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிவிட்டனர். அதன் பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர அனுமதி கேட்டோம்.

    அவர் பி.என். புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசி அவரை சந்தித்து சேர்ந்து கொள்ளும் படி கூறினார். ஆனால் மாநகராட்சி தலைமை ஆசிரியை என்னை சேர்த்து கொள்ள மறுத்துவிட்டார்.

    எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிய தனியார் பள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    ×