search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boarding school"

    • பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

    சேலம்:

    பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

    முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

    • லிங்கமாவூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது.
    • தற்போது 20 மாணவர்கள் வரை பராமரிக்கப்படுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட லிங்கமாவூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 20 மாணவர்கள் வரை பராமரிக்கப்படுகின்றனர். அருகிலுள்ள ஈசல்திட்டு, குருமலை சுற்றுப்பகுதி மலைப்பகுதிகளிலிருந்து வந்து தங்கி படிக்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு உணவு, கல்வி, தங்குமிடத்துடன் அவர்களின் தனித்திறன்களை ஊக்குவிப்பது, விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது, சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு என அனைத்து வகையிலும் மேம்படுத்தும் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாக உள்ளது.நடப்பு கல்வியாண்டில் பள்ளி தலைமையாசிரியர் ஐயப்பன், மற்றும் ஆசிரியர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நோட்டீஸ் வினியோகித்து சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், உண்டு உறைவிடப்பள்ளிகளில் உள்ள வசதிகள், மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, உதவிதொகை உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பிட்டு, பஸ் நிறுத்தம் பகுதியில் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். மலைவாழ் கிராமங்களுக்கும் நேரடியாக சென்று அப்பகுதி பெற்றோருக்கும் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    • ராமநாதபுரம் அரசு உண்டு உறைவிடப்பள்ளி தற்காலிக இடத்தில் தொடங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • தமிழகத்தில் ஏற்கனவே 5 மாவட்டங்களில் 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை செயல்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் ரூ.6 கோடியில் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அரசு உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் தற்போது தற்காலி கமாக பட்டணம்காத்தான் பகுதியில் மூடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆக.1-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே 5 மாவட்டங்களில் அரசு உண்டு உறைவிடப்பள்ளிகள் 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை செயல்படுகின்றன.

    கடந்தாண்டு ராமநாத புரம் உள்பட 27 மாவட்டங்களில் தலா ரூ.6 கோடியில் அரசு உண்டு உறை விடப்பள்ளி களை தொடங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இந்த பள்ளிக்கு தேவையான 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில், இந்த ஆண்டே பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளை ஆக.1-ந்தேதி முதல் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிகமாக பட்டணம்காத்தான் பகுதியில் இந்த ஆண்டு மூடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் தற்காலிக வகுப்புகள் தொடங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேற்குவங்காளம் மாநிலம் டார்ஜீலிங்கில் உள்ள உறைவிடப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
    கொல்கத்தா:

    பீகார் மாநிலம் பாட்னா நகரைச் சேர்ந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன், மேற்குவங்காளம் மாநிலம், குளுகுளு பிரதேசமான டார்ஜீலிங்கில் உள்ள மிகப்பிரபலமான உறைவிடப் பள்ளியில் தங்கியவாறு நான்காம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில், நேற்று இரவு உணவு வேளையின் போது சிறுவனை காணாத விடுதி காப்பாளர், அவனது அறைக்கு தேடிச் சென்றார். அப்போது, அந்த அறையின் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் தூக்கில் அவன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த காப்பாளர், உடனடியாக தூக்கில் இருந்து சிறுவனை கழற்றி, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி, சிலுகுரியில் உள்ள வடக்கு வங்காளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள சாத்தியமில்லை எனவே இந்த வழக்கை கொலை என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் போலீசாரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தரமான கல்வியைத் தேடி, பீகார் மாநிலத்தில் இருந்து மேற்குவங்காளம் வந்து படித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
    ×