search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "model"

    • அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர்.
    • அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.

    பஹ்ரைன்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைகன் கென்ன கம் ( வயது 31). மாடல் அழகியான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    பஹ்ரைனில் அவருக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக கைகன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இவர் சமூக வலை தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சமூகவலை தளங்களில் பதிவடுவதை நிறுத்தினார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் மாடல் அழகி கைகன் கென்னகம் பஹ்ரைனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. அவரது உடலில் எந்த காயமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அவரது கையில் டாட்டூ வரைந்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அது தங்களது மகள் தான் என கைகனின் பெற்றோர் ஒத்துக்கொண்டனர்.

    மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக தூதரகத்திலும் புகார் மனு கொடுத்து உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக வெளிநாடுகளில் மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் இளம் வயதில் மரணத்தை தழுவுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

    சேலம்:

    பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

    முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

    • விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று பேஷன்ஷோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப்வாக்' வந்தனர்.

    24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப்வாக் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மின் விளக்குகளுக்காக அந்த இரும்புதூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் பாபிராஜ் என்ற வாலிபர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பேஷன்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர். 

    சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும், குற்றத்தடுப்பு சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டது.

    இந்த குறும்படத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நடித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு குறும்படத்திற்கான குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறுந்தகடை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 1,000 கி.மீ. தூரம் உள்ளது. வடக்கு, தென் மாவட்டங்களை இணைக்கக்கூடிய வகையில் உள்ள விழுப்புரம் வழியாகத் தான் பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. மாதத்திற்கு சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விழுப்புரம் மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இதனாலேயே இங்கு சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது.

    மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 915 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து ‘பேரிகார்டு’ வைத்தல், அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களில் போலீசார் பணியில் இருந்து மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க செய்தல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தி பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதன் விளைவாக கடந்த 2017-ம் ஆண்டில் விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 834 ஆக குறைந்துள்ளது. விபத்துகளை தடுக்க பொதுமக்களிடம் போலீசார், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முதலில் போலீசார் வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட், ஷீட்பெல்ட் அணிந்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். போலீசாரை பார்த்து, மக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள். விபத்துகளை தடுக்க காவல்துறையினரால் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அந்தளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜன், ராபின்சன், சுரேஷ்பாபு, அப்பாண்டைராஜ், குறும்பட தயாரிப்பாளர் வெள்ளையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×