search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "homework"

    • வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது.
    • வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள்.

    பல வீடுகளில் குழந்தைகளின் வீட்டு பாடங்களை பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய கொடுப்பது அவர்களை செம்மைப்படுத்தவும், ஒழக்கத்தை கற்பிக்கவும் தான். இது நம்முடைய கல்வி கட்டமைப்பில் உள்ள முக்கியமான அம்சமாகும். வீட்டுப்பாடங்களை பெற்றேனின் உதவியுடன் குழந்தை செய்யமே தவிர, பெற்றோரே அதை முழுமையாக செய்து கொடுக்கக்கூடாது.

    ஒரு விளையாட்டு வீரனுக்கு, எவ்வாறு பயிற்சியாளர் எப்போதும் தேவைப்படுகிறாரோ, அதுபோலத்தான் பெற்றோரும் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவைப்படுவார்கள். விளையாட்டு வீரனுக்கு பதிலாக பயிற்சியாளர் ஓடவோ, உடற்பயிற்சி செய்யவோ மாட்டார். மாறாக, சிறந்த முறையில் வழிநடத்துவார். அதையே பெற்றோரும் பிள்ளைகளிடத்தில் பிள்பற்ற வேண்டும்.

    தொழில்நுட்பத்தின் அதிதீவிர வளர்ச்சியால், இந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கற்பனைத்திறன் முடங்கிவிடுகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் வீட்டுப்பாடம், செயல்முறை வகுப்புகள் போன்றவைதான் குழந்தைகளின் கற்பனைத்திறனை வார்க்கும். குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை அவர்களே செய்வதற்கு உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் இங்கே..

    * குழந்தைகளை அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தபடி வீட்டுப்பாடம் செய்ய அனுமதியுங்கள். அந்த இடத்தில் டி.வி, மொபைல் போன்ற கவனத்தை திசைத்திருப்பும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    * குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடம், அவர்களின் வயதிற்கு மிக அதிக என்று நினைத்தால், அதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள், மாறாக, வீட்டுப்பாடத்தை, நீங்களே செய்யாதிர்கள். இது குழந்தைக்கு வீட்டுப் பாடங்கள் மீது அலட்சியத்தை ஏற்படுத்தும்.

    * வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது. அதை உரையாடலின் வழியாகவும், வழிநடத்தலின் மூலமாகவும் நீங்களே அவர்களுக்கு சுற்றுக்கொடுக்கள், வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தையோடு பாடம் தொடர்பாக அவர்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள்.

    * வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்ய வில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். 'உன்னால் இதை செய்ய முடியும்' என்று கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.

    * வீட்டுப்பாடத்தை குழந்தைகள் நல்லமுறையில் செய்தால், அவர்களை பாராட்டி பரிசளியுங்கள். காபி மக், ஸ்டடி டேபிள், பழக்கூடைகள், புத்தகப்பை என அவர்களுக்கு உதவும் விஷயங்களை மட்டும் கொடுக்கலாம்.

    • வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள். நண்பர்களோடு இணைந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமென குழந்தை விரும்பினால், அதற்கேற்ற சூழலையும் உங்கள் மேற்பார்வையில் ஏற்படுத்திக் கொடுங்கள். குழு உணர்வு மேலோங்க, இது சிறந்த பயிற்சியாகும்.

    அத்தகைய சமயங்களில், உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்கும். அதில் அவர்களை மேம்படுத்துங்கள். எப்போதும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அடிக்கடி ஆசிரியரை சத்தித்து, பள்ளியில் உங்கள் குழந்தைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

    • இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார்.
    • கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மேட்டத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகள் ராஜேஸ்வரி (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது வீட்டில் உள்ள பாடம் படிக்கவில்லை என்று ராஜேஸ்வரியை திட்டி உள்ளனர். இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வயல்வெளியில் உள்ள கிணற்றில் ராஜேஸ்வரி குதித்து தற்கொலை செய்தார். அப்போது வயல்வெ ளிக்குச் சென்றவர்கள் கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் பொதுமக்கள் ஒன்று கூடி அங்கு பார்த்த போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் ராஜேஸ்வரி என தெரியவந்தது. திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன்மற்றும் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை அவரை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள்.
    • 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணி தொடக்கம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.

    அவரை கட்டளை தம்பிரான் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி மடத்தில் தங்கி கோவில் திருப்பணிகளை கண்காணித்து வரும் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது ஆளுனர் இல.கணேசன் தருமபுரம் ஆதீனம் சார்பில் 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணியை தொடங்கி வைத்தார்.

    தருமை ஆதீனம் வேத சிவாகமம் பாடசாலை மற்றும் தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள். அதனைக் கேட்டு அவர்களை வணங்கி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, விதிபி. பள்ளி செயலர் சாமிநாதன், கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்ரமணியன், கோயில் கணக்கர் செந்தில், வி.எச்.பி நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் சட்டைநாதர் சாமி தேவஸ்தானத்துடன் இணைந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து

    சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

    விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாராதணை நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள், சிவசுப்பிரமணியன் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர்.முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த், தாளாளர் சுதேஷ் ரோட்டரி நிர்வாகிகள் சுசீந்திரன், சாமி செழியன், சுடர்.கல்யாணசுந்தரம், முன்னாள் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.

    2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Homework #HighCourt
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறுகின்றனர்.



    தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதனடிப்படையில், மத்திய அரசும் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதை படித்து பார்த்த நீதிபதி, ‘இந்த உத்தரவை காகித வடிவில் வைத்திருக்காமல், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், ‘மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் புத்தக சுமையை குறைப்பது தொடர்பான மாதிரி திட்டத்தை உருவாக்கியுள்ளதை போல, தமிழகத்தில் அதுபோன்ற திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், ‘2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, 3 வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் சி.பி.எஸ்.இ. விளம்பரம் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது மனுதாரர் புருஷோத்தமன், ‘சி.பி.எஸ்.இ. 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பொதுஅறிவு பாடத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான், அமீர்கான், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் இவர்களை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?. இதில் என்ன பொதுஅறிவு உள்ளது?’ என்று சி.பி.எஸ்.இ. மீது குற்றம் சுமத்தி வாதிட்டார்.

    அதற்கு நீதிபதி என்.கிருபாகரன், நாட்டிலேயே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கும் சி.பி.எஸ்.இ.யின் தரம் என்ன ஆனது?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.  #Homework #HighCourt 
    உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு பதிலாக தனியாக அலுவலக உதவியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    துரைமுருகன்:- ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக கருதப்படும் தமிழ்நாடு போலீசால் ஏன் செயின் பறிப்பு திருடர்களைக்கூட பிடிக்க முடியவில்லை?. இந்த மந்த நிலை ஏன்?. அவர்களுக்கு பணிக்கான ஊதியம் இல்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 200 போலீசார் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் கொத்தடிமைகள் நிலையில் உள்ளனர். பெரிய அதிகாரிகள் வீட்டில் வேலைக்காரர்களை விட கேவலமான நிலையில் வேலை பார்க்கிறார்கள். இந்த கொத்தடிமை நிலை தீர்ந்தால் போலீசாருக்கு சுதந்திரம் கிடைக்கும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எந்த அரசாக இருந்தாலும் கொலை, கொள்ளை குற்றத்தை எங்கேயும், யாரும் தடுக்க முடியாது. குறைக்க முடியும். தமிழகத்தை பொறுத்தவரை குற்றங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதற்கு தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்து வருகிறது. இன்றைக்கு சென்னை மாநகரம் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற மாநகர பகுதிகளில் எல்லாமே சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டு, செயின் பறிப்பை தடுப்பதற்காக, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்காக இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதுமட்டுமல்ல, போலீசார் எல்லாம் உயர் அதிகாரிகள் வீட்டில் பணியமர்த்தப்படுவதாக சொன்னார். அதை எல்லாம் தவிர்ப்பதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் ஏதாவது இப்படி பணியிலே அமர்த்தப்பட்டால், அவர்களை எல்லாம் விடுவித்து, அவர்களுக்கு பணி செய்வதற்காக தனியாக அலுவலக உதவியாளர்கள் நியமிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    சீனாவில் பள்ளி மாணவி வேகமாக சென்று கொண்டிருந்த கார் சன்னலில் அமர்ந்து மேற்கூரையில் நோட் வைத்து எழுதிக்கொண்டே பயணம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. #HomeWork #Chinataxi
    பீஜிங்:

    சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கடந்த வாரம் டேக்சி மீது அமர்ந்து படித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி காரின் ஜன்னல் மீது அமர்ந்து மேற்கூரையில் நோட் வைத்து எழுதிக்கொண்டிருந்தார். இதனை பின்னால் வந்த காரில் இருந்த நபர் வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்தார்.

    வேகமாக செல்லும் காருக்கு வெளியே அமர்ந்து மாணவி பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காருக்கு அருகில் பேருந்து மற்றும் பல வாகனங்கள் வந்த போதும் மாணவி அமர்ந்திருந்தார். இதனை கண்ட காரை ஓட்டிய மாணவியின் தந்தை அவரை உள்ளே இழுத்தார். ஆனால் மாணவியை கவனிக்காமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

    இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவியின் தந்தை டாக்சி ஓட்டக்கூடாது என டாக்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. #HomeWork #Chinataxi

    ×