search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்

    • விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் சட்டைநாதர் சாமி தேவஸ்தானத்துடன் இணைந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து

    சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

    விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாராதணை நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள், சிவசுப்பிரமணியன் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர்.முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த், தாளாளர் சுதேஷ் ரோட்டரி நிர்வாகிகள் சுசீந்திரன், சாமி செழியன், சுடர்.கல்யாணசுந்தரம், முன்னாள் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×