search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "morning"

    • இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார்.
    • கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மேட்டத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகள் ராஜேஸ்வரி (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது வீட்டில் உள்ள பாடம் படிக்கவில்லை என்று ராஜேஸ்வரியை திட்டி உள்ளனர். இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வயல்வெளியில் உள்ள கிணற்றில் ராஜேஸ்வரி குதித்து தற்கொலை செய்தார். அப்போது வயல்வெ ளிக்குச் சென்றவர்கள் கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் பொதுமக்கள் ஒன்று கூடி அங்கு பார்த்த போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் ராஜேஸ்வரி என தெரியவந்தது. திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன்மற்றும் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை அவரை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
    • கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பட்டுக்கோட்டை கோட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.

    கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எரிவாயு சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.
    • ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் அஜய்ராஜ் சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

    மேலும் வேலைக்கு செல்பவர்களும் சாரல் மழையில் நனைந்த படி வேலைக்கு சென்றனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel
    தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.



    இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 19) அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel

    காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

    காலை எழுந்ததும் முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு மற்ற வேலையை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இது ஏன்? என்ன காரணத்திற்காக இவ்வாறு தண்ணீர் பருகுகின்றார்கள்? இதை பற்றி அறிவியல் என்ன கூறுகிறது பார்ப்போம்:

    இரவு குறைந்தது 7 மணி நேரம் தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கிறோம். இதன் விளைவாக உடலில் நீரின் அளவு குறைந்து இருக்கும். வறண்ட தொண்டை இதற்கு ஆதாரம். இப்படி இருக்க, எழுந்தது நீர் பருகினால் சில நொடிகளில் இழந்த நீரை உடல் மீட்டுக்கொள்ளும்.

    - ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து வறண்ட உணவு குழாயில் உணவு பண்டங்கள் இறங்குவது சிறிது சிரமம் ஆகிவிடுகிறது. சில முறை குமட்டல், அடைப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வு, தண்ணீரை முதலில் குடிக்க வேண்டும். இது நீண்ட இடைவேளிக்குப்பிறகு உணவு எடுத்துக்கொள்ளும் போதும் பொருந்தும்.

    - காலையில் எழுந்திரிக்கும் போது உடலில் உஷ்ணம் இருப்பதை பலரும் சந்தித்திருப்பார்கள். உடலை குளிர்விக்க ஒரு டம்ளர் நீர் உதவும்.

    - பெரும்பாலான நேரங்களில் நீரின் தாகத்தை மனித மூளை பசி என்று புரிந்துக்கொள்ளும். இதனால் உடலில் சக்தி குறையாமல், உணவு தேவைப்படாத போது பசி எடுப்பதாக மாற்றாக கூறும் மூளைக்கு தீனி போட்டு போட்டு சில நாட்களில் 2 கிலோ எடையை பரிசாக பெற்றுக்கொள்கிறோம்.

    - உணவை அதிகமாக உட்கொள்ளமாட்டீர்கள், இதனால் அளவான உணவு மட்டும் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போல் தோன்றும். தானாகவே எடை குறையும்.

    - உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும், வயிற்றை அலசி அழுக்குகளை வெளியேற்றும்.

    - உடலின் செயல்பாட்டை 24% வரை அதிகரிக்க உதவும்.

    - சிறு நீரகத்தை சுத்தப்படுத்த உதவும்.

    - முகம் மாசு மரு இன்றி பளபளக்கும்.

    வெறும் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லையென்றால், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

    2019-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடியும் ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். #2019NewYear #NewYearCelebration
    சென்னை:

    உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாக ஆங்கில புத்தாண்டு விளங்கி வருகிறது. பரந்து, விரிந்த இந்த பூமிப்பந்தில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

    அவ்வகையில், பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலிசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.
     
    இந்நிலையில், (இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

    நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    சரியாக 12 மணி அடித்ததும் நாட்டின் பல முக்கிய பெருநகரங்களில் புத்தாண்டு விழா களைகட்டியது. கடற்கரைகள், பூங்காக்கள், முக்கிய சாலைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மகிழ்ச்சி கேளிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    குறிப்பாக, சென்னையில் அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எட்வர்ட் எலியட்ஸ் பீச் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.

    அதைதொடர்ந்து, இன்று அதிகாலையில் இருந்தே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை, பூஜைகளை செய்து இந்த புத்தாண்டு இனிதாக, வளமாக அமைய தெய்வங்களை வேண்டிக்கொண்டனர்.



    உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்து மக்கள் கங்கை நதியில் புனித நீராடி, பூஜை புனஸ்காரங்கள் செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் தடாகத்தில் சீக்கிய மக்களும் புனித நீராடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதேபோல், ஜைன மதத்தை சேர்ந்தவர்களும் இனிப்புகளை பரிமாறி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு இனிதாகவும், சிறப்பாகவும் அமைய ‘மாலைமலர் டாட்காம்’ வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! #2019NewYear #NewYearCelebration
     
    ×