search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்"

    பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது. 

    இந்த முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி  பேளூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி  தொடங்கி வைத்தார். 

    துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.
    இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    மானாமதுரை
     
    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய  பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். 

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான   பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது. யாருக்கும் பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டியும், அனைத்து  கட்சியினர், உள்ளூர் அனைத்து ஜமாத்தார்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடந்தது. 

    இதில்  பங்கேற்ற பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா, செயலாளர் துருக்கி ரபீக்ராஜா ஆகியோர் தலைமையில் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் கூடி அங்கிருந்து  கோஷங்கள் எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். 

    அதன்பின்  பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டும், புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.  போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து   வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

    இதுகுறித்து மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில் ஊருக்கு வெளியே 4 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யவும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 

    விரைவில் தேதி அறிவிக்காமலேயே  சென்னையில்   தலை மை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பஸ் நிலைய பிரசனைக்கு தீர்வு கிடைக்கும்வரை   போராட்டம் தொடரும் என்றார்.
    திருமங்கலம் பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    திருமங்கலம்

    கடந்த சில நாட்களாக  அக்னி வெயில் கொளுத்தி வந்த  அக்னி நட்சத்திரம் நேற்று முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென மதுரை மாவட்டத்தில் பல இடங்க ளில் பலத்த மழை பெய்தது.

    திருமங்கலம், சாத்தங்குடி, கப்பலூர்,மேலக்கோட்டை, உச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்து அவதிபட்டனர்.

     மேலும் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுகுளு காற்று வீசியது.கோடை காலத்திலும் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    இரவு முழுவதும் மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதிபட்டனர்.
    மேலூர்

    மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. 

    கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அய்யாபட்டி, மங்க ளாம்பட்டி, கருங்காலக்குடி, உடப்பன்பட்டி, ஓட்டக்கோவில்பட்டி, காரியேந்தல்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக மாலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் காலை வரையிலும் வரவில்லை. 

    இதனால் மின்சாரவசதி இல்லாமல் கிராமத்தினர் சிரமம் அடைந்தனர்.தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். 

    மின்சார வசதி இல்லாமல் கைப்பேசிகள் மற்றும் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. சில நாட்களாகவே கொட்டாம்பட்டி சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்சார துண்டிப்பு பகலில் மட்டுமின்றி இரவிலும் அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். 

    விவசாய பகுதிகளில் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியாமலும், குடிநீர் பிரச்சினைகளும் இதனால் ஏற்படுவதால், பராமரிப்பு பணிகளை மின்வாரிய பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    வெள்ளலூர் பகுதியில் சிட்கோ அமைக்க 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இதனை தலைமையிடமாகக் கொண்டு 66 கிராமங்கள் உள்ளன. இதனால் இதனை வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் மேலூர் தாலுகா அலுவலகம் வந்து துணை தாசில்தார் மஸ்தானிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

    அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. வெள்ளலூரை சேர்ந்த 66 கிராம மக்கள் இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் மற்றும் வல்லடிகாரர் கோவில் திருவிழாக்கள் ெதாடங்குவதற்கு முன்பு சாமி கும்பிடுவது வழக்கம். அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை பகுதியில் மான், மயில்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. 

    இந்த மலையைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மலையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து அதனை வைத்து விவசாய பணிகள் நடந்து வருகிறது. 

    மேலும் இங்கே கால்நடை மேய்ச்சல் பகுதியும் உள்ளது. இங்கே சிட்கோ அமைத்தால் 66 கிராம மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் வன விலங்குகள், விவசாய நிலங்கள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும். எனவே சிட்கோவை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×