என் மலர்
நீங்கள் தேடியது "People crowd"
- அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருகின்றனர்.
- மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள மணப்பாடு முழுக்க முழுக்க மீனவர்களே வசிக்கும் கிராமம் ஆகும். இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள்.
மற்ற நாட்களில் அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருவதும், ஒரு நாள் முன்னதாக மாலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மறு நாள் காலையில் வெளியே வருவதும், ஒரு சில நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து வருவது என மூன்று பிரிவாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நாட்டுப் படகு, கட்டுமரம் பயன்படுத்தி தான் அதிகமான மீன்களை இப்பகுதி மக்கள் பிடித்து வருகின்றனர். உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ளமக்கள் கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மணப்பாடுகடற்கரைக்கு காலையிலே வந்துமீன்களை வாங்கி செல்கின்றனர்.
கடலில் மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்து உடன் கடற்கரையில் வைத்து ஏலம் போடுவார்கள். ஏலம் போட்ட பின்புதான் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ்கட்டிகள் போடுவார்கள். மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
இதுபற்றி கடற்கரைக்கு மீன் வாங்க வந்த ஒருவர் கூறியதாவது:-
அசைவ உணவுகளில் மிகவும் சத்தானது மீன்கள் மட்டும் தான். வீதி வீதியாக விற்பனைக்கு வரும் மீன்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டு பதப்படுத்தி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் இங்கு வந்து வாங்கினால் மணப்பாடு கடலில் பிடித்து வரும் மீன்கள் உயிரோட்டம் உள்ளதாக இருக்கும்.
மேலும் மணப்பாடு மீன்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. சுவையுண்டு, வாசனை உண்டு. அதனால் தான் நானே சாத்தான்குளத்தில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு இங்கு வந்துள்ளேன். நான் எனது நண்பர்கள் என பலர் சேர்ந்து மீன்களை மொத்தமாக வாங்கி பிரித்து எடுத்து கொள்வோம். மேலும் ஒரு சில நாளில் கனமழை எச்சரிக்கை இருப்பதால் இன்றே மீன்கள் வாங்க வந்து விட்டோம் என்று கூறினார்.
கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வந்திருந்தனர். இருந்தாலும் சுற்றுப்புற பகுதி கிராமமக்களுக்கு மீன்களை விற்பனை செய்வதில் மணப்பாடு மீனவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் விளையாட்டு சாதனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இடம் பெற்று உள்ளன.
தாமதமாக தொடங்கப்பட்ட பொருட்காட்சி பொங்கல் விடுமுறையை யொட்டி களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக கூட்டமின்றி காணப்பட்ட பொருட்காட்சியில் பொங்கல் முதல் கூட்டம் கூடியது.
நேற்று மாட்டு பொங்கல் ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டுகளித்தனர். இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.
இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பம், குடும்பமாக பொருட்காட்சிக்கு படையெடுக்க தொடங்கினர். புதுமண தம்பதிகள், காதல் ஜோடிகள் என பிற்பகல் முதல் கூட்டம் கூட தொடங்கியது. இன்று சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்கள் அதிகம் உள்ளதால் அதில் சிறுவர்களை அமர்த்தி பெற்றோர்கள் மகிழ்வித்தனர். எப்போதும் போல சோலா பூரி, பஜ்ஜி, அப்பளம் போன்ற உணவு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொருட்காட்சி இன்னும் 2 மாதம் வரை நடைபெறுகிறது. #KaanumPongal
தை மாத பிறப்பை முன்னிட்டு நாளை தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தி வருகின்றனர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக மக்கள் கூட்டம் இன்று கடை வீதிகளில் அலைமோதியது.
கரும்பு ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையானது. காலை முதலே பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அனைத்து பூக்களும் கடுமையாக விலை உயர்ந்தது.
மல்லிகை கிலோ ரூ.3000 வரை விற்பனையானது. செவ்வந்தி ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், வெள்ளை செவ்வந்தி ரூ.200, முல்லைப்பூ ரூ.2200, ஜாதிப்பூ ரூ.1800, வெள்ளை ஜாதி ரூ.2000 சம்பங்கி ரூ.400 என அனைத்து பூக்களும் விலை அதிகமாக விற்றது. மலர்கள் கொண்டு மாலைகள் தயாரிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் தடை காரணமாக தற்போது பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகளில் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாழை இலையும் கடுமையாக விலை உயர்ந்தது.
கிழிந்த இலைகளை கூட ஒன்று சேர்த்து சிறிய ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்துவதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
பெரிய இலைகள் குறைந்தது ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதனால் வாழை இலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






