என் மலர்
நீங்கள் தேடியது "tag 134623"
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி சர்க்கரை ஆலை 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால் பழைய எந்திரங்களை கொண்டு, கரும்பு அரவை நடந்து வருகிறது. கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்காததால் கடந்த மாதம் 20-ந் தேதிக்கு பிறகே, கரும்பு வெட்டி அரவை வேகமெடுத்துள்ளது.
விவசாயிகள், அறுவடை செய்த கரும்புகளை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். கரும்பு கொள்முதலுக்கான தொகையை 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு எடை போடும் பில் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்க வேண்டும். மாறாக, கொள்முதல் செய்த கரும்புக்கு 'பில்' வழங்கப்படாததால், எடை எவ்வளவு என்பதை அறிய முடியவில்லை எனதிருப்பூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாராபுரம் பகுதி கரும்பு விவசாயிகள் கூறியதாவது:-
கரும்பு அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, அறுவடை செய்யப்பட்டது. விளைநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான, 'பில்' ரசீதுகளை வழங்குவதில்லை. இதனால் எவ்வளவு எடையுள்ள கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவதில்லை. செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை தகவல் எதுவும் அனுப்பப்படவில்லை என்றனர்.
இதுகுறித்து அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பால் பிரின்ஸி ராஜ்குமார் கூறுகையில்:
கரும்பு அறுவடைக்கு தாமதம் ஏற்பட்டதால், கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து அரவை துவங்கியுள்ளது. 'பீல்டு' அலுவலர்கள் தேவையான ஆட்களை அழைத்து வந்துள்ளனர். கொள்முதல் செய்யும் இடத்திலேயே, எடை ரசீது வழங்கப்படும். கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் கரும்புக்கான தொகை விடுவிக்கப்படும் என்றார்.
ஆம்பூரை சேர்ந்த தங்க நகை தொழிலாளி சி.எஸ்.தேவன் (வயது 52). இவர், வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், உலக சாதனை புரிவதற்காக முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் மகாத்மா காந்தி, அப்துல்கலாம் ஆகியோரின் உருவங்களையும், கிறிஸ்துமஸ் குடில், மிகச்சிறிய அளவில் கிரிக்கெட் உலக கோப்பை, திருக்குறள் சுவடி ஆகியவற்றையும் தங்கத்தில் உருவாக்கி சாதனை படைத்து உள்ளார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். 4 செ.மீ உயரத்தில் கரும்பு, 1 செ.மீ உயரத்தில் மாடு ஆகியவற்றை தங்கத்தில் செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். #Pongal
தை மாத பிறப்பை முன்னிட்டு நாளை தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தி வருகின்றனர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக மக்கள் கூட்டம் இன்று கடை வீதிகளில் அலைமோதியது.
கரும்பு ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையானது. காலை முதலே பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அனைத்து பூக்களும் கடுமையாக விலை உயர்ந்தது.
மல்லிகை கிலோ ரூ.3000 வரை விற்பனையானது. செவ்வந்தி ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், வெள்ளை செவ்வந்தி ரூ.200, முல்லைப்பூ ரூ.2200, ஜாதிப்பூ ரூ.1800, வெள்ளை ஜாதி ரூ.2000 சம்பங்கி ரூ.400 என அனைத்து பூக்களும் விலை அதிகமாக விற்றது. மலர்கள் கொண்டு மாலைகள் தயாரிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் தடை காரணமாக தற்போது பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகளில் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாழை இலையும் கடுமையாக விலை உயர்ந்தது.
கிழிந்த இலைகளை கூட ஒன்று சேர்த்து சிறிய ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்துவதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
பெரிய இலைகள் குறைந்தது ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதனால் வாழை இலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள் முக்கிய இடம் பிடிக்கும்.
பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கி உள்ளன.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் சிறப்பு சந்தைகள் அமைத்து பொங்கல் பொருட்கள் விற்பனையை தொடங்கி உள்ளனர்.
முதல்கட்டமாக நேற்று முதல் பூ மார்க்கெட் பின்புறம் உள்ள பகுதியில் கரும்பு மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
பண்ருட்டி அருகில் உள்ள சத்திரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கரும்புகள் வர தொடங்கி உள்ளன. நேற்று 9 லாரிகளிலும் இன்று காலை வரை 7 லாரிகளிலும் கரும்புகள் வந்துள்ளது.
20 கரும்பு கொண்ட ஒரு கட்டின் விலை தற்போது ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கரும்பு வியாபாரி ரஜினிகாந்த் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 11-ந் தேதிக்கு பிறகு மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 400 முதல் 500 லாரிகள் வரை கரும்பு லோடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். 2 நாட்களுக்கு பிறகு கரும்பு விலை சற்று உயரும்.
மஞ்சள் கொத்து தற்போது குறைந்த அளவே சந்தைக்கு வந்துள்ளது. ஒரு மஞ்சள் கொத்து 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் விலை உயரும்’ என்றார். #Pongal
நத்தம்:
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி அதற்கேற்ப விவசாயிகளின் வாழ்விலும் ஒரு வழிபிறக்கும் நாளாக இன்றளவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி பொங்கல் வைக்கும்போது கரும்பு,மஞ்சள்,மாவிலை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு எனும் கருப்பு கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஆவிச்சிபட்டி, சேர்வீடு, குட்டுர், காசம்பட்டி, வத்திபட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் ஆங்காங்கே இந்த கரும்புகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த கரும்பு குறித்து விவசாயி சீரங்கம்பட்டி அழகர்சாமி (55)கூறியதாவது:-
இந்த கருப்பு கரும்புக்கு வயது 10 மாதங்களாகும். கருப்புகரும்பு வேரோடு பறிக்கப்படுவதால் இந்த கரும்பை அறுவடை செய்து விட்டு மற்ற ஆலைகரும்பு போல் மறுதாம்பு விடமுடியாது. ஒரே மகசூல் மட்டுமே கிடைக்கும். இந்த கரும்பானது அதிக இனிப்புத்தன்மை வாய்ந்தது. ஆனால் வெல்லம் காய்ச்சுவதற்கு ஏற்றது அல்ல. தவிர ஒரு ஏக்கருக்கு அனைத்து செலவுகளையும் சேர்த்து அறுவடை செய்வது உள்பட ரூ.50ஆயிரம் வரை செலவாகும். வரவு சுமார் ரூ.90ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை கிடைக்கும்.
பொதுவாக விவசாய பணி வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது கடும் தட்டுப்பாடாக இருக்கிறது. அத்துடன் இயற்கையாக பெய்யும் மழையும், கிணறுகளில் உள்ள நீர் மட்டமும் குறையாமல் இருந்தால் தான் கரும்பு விவசாயம் லாபத்தை ஈட்டமுடியும். அதிகமான வேலைகள் இந்த கரும்பில் தான் உண்டு.
இதற்கெல்லாம் அரசு விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கினால் இந்த கரும்பை விவசாயிகள் விரும்பி பயிரிடுவார்கள். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் ஒரு ஜோடி கரும்புத்தட்டை ரூ.40முதல் ரூ.50 வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் தினம் நெருங்கும் காலத்தில் இந்த கரும்புகள் அறுவடை செய்து மதுரை, திண்டுக்கல், மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு ஆண்டில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு அரவை நிர்ணயித்து கரும்பு நடவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, மற்றும் பொதுப்பணித்துறை ஏரிகள் முற்றிலும் வறண்டு இருப்பதால் ஆற்றுப்பாசனம் மற்றும் நிலத்தடிநீர் பாசனம் போதிய தண்ணீரின்றியும், நிலத்தடிநீர் ஆயிரம் அடிக்குகீழ் சென்றதாலும் கரும்பு, நிலக்கடலை, காய்கறி பயிர்கள் காய்ந்து வருகின்றன.
கரும்பு அருவடைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கரும்பு காய்ந்ததால் வெல்லம் தயாரிக்க விவசாயிகள் கரும்பை வெட்டி வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஒகேனக்கலில் சுமார் 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றால் தருமபுரி, பாலக்கோடு பகுதி பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைப்பதில்லை.
மேலும், குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து ராட்சத மோட்டர்கள் மூலம் தருமபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது வரும் உபரிநீரை ஒகேனக்கல் குடிநீர் குழாய் மூலம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணிதுறை ஏரிகள், அணைகள் என தண்ணீரை நிறப்பினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுபாடு குறையும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதலாக ஒருசில மின்மோட்டர்கள் பொருத்தினால் பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பலாம் எனவும் கூறுகின்றனர்.
எனவே, பொதுப் பணித் துறை ஏரிகளில் தண்ணீரை நிரப்ப பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வறட்சியால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருவதால் உடனடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் கரும்பை வெட்டவும், காய்ந்த கரும்பிற்கு இழப்பீடு வழங்கவும், கரும்பு பயிருக்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






