search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "turmeric crop"

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கி உள்ளன. #Pongal
    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள் முக்கிய இடம் பிடிக்கும்.

    பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கி உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் சிறப்பு சந்தைகள் அமைத்து பொங்கல் பொருட்கள் விற்பனையை தொடங்கி உள்ளனர்.

    முதல்கட்டமாக நேற்று முதல் பூ மார்க்கெட் பின்புறம் உள்ள பகுதியில் கரும்பு மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    பண்ருட்டி அருகில் உள்ள சத்திரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கரும்புகள் வர தொடங்கி உள்ளன. நேற்று 9 லாரிகளிலும் இன்று காலை வரை 7 லாரிகளிலும் கரும்புகள் வந்துள்ளது.

    20 கரும்பு கொண்ட ஒரு கட்டின் விலை தற்போது ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கரும்பு வியாபாரி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 11-ந் தேதிக்கு பிறகு மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 400 முதல் 500 லாரிகள் வரை கரும்பு லோடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். 2 நாட்களுக்கு பிறகு கரும்பு விலை சற்று உயரும்.

    மஞ்சள் கொத்து தற்போது குறைந்த அளவே சந்தைக்கு வந்துள்ளது. ஒரு மஞ்சள் கொத்து 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் விலை உயரும்’ என்றார். #Pongal

    ×