search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கரும்பு கொள்முதலுக்கான தொகையை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

    கொள்முதல் செய்யும் இடத்திலேயே, எடை ரசீது வழங்கப்படும்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி சர்க்கரை ஆலை 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால் பழைய எந்திரங்களை கொண்டு, கரும்பு அரவை நடந்து வருகிறது. கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்காததால் கடந்த மாதம் 20-ந் தேதிக்கு பிறகே, கரும்பு வெட்டி அரவை வேகமெடுத்துள்ளது.

    விவசாயிகள், அறுவடை செய்த கரும்புகளை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். கரும்பு கொள்முதலுக்கான தொகையை 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு எடை போடும் பில் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்க வேண்டும். மாறாக, கொள்முதல் செய்த கரும்புக்கு 'பில்' வழங்கப்படாததால், எடை எவ்வளவு என்பதை அறிய முடியவில்லை எனதிருப்பூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தாராபுரம் பகுதி கரும்பு விவசாயிகள் கூறியதாவது:-

    கரும்பு அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, அறுவடை செய்யப்பட்டது. விளைநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான, 'பில்' ரசீதுகளை வழங்குவதில்லை. இதனால் எவ்வளவு எடையுள்ள கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவதில்லை. செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை தகவல் எதுவும் அனுப்பப்படவில்லை என்றனர்.

    இதுகுறித்து அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பால் பிரின்ஸி ராஜ்குமார் கூறுகையில்:

    கரும்பு அறுவடைக்கு தாமதம் ஏற்பட்டதால், கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து அரவை துவங்கியுள்ளது. 'பீல்டு' அலுவலர்கள் தேவையான ஆட்களை அழைத்து வந்துள்ளனர். கொள்முதல் செய்யும் இடத்திலேயே, எடை ரசீது வழங்கப்படும். கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் கரும்புக்கான தொகை விடுவிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×