என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 224919
நீங்கள் தேடியது "சிட்கோ"
வெள்ளலூர் பகுதியில் சிட்கோ அமைக்க 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இதனை தலைமையிடமாகக் கொண்டு 66 கிராமங்கள் உள்ளன. இதனால் இதனை வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் மேலூர் தாலுகா அலுவலகம் வந்து துணை தாசில்தார் மஸ்தானிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. வெள்ளலூரை சேர்ந்த 66 கிராம மக்கள் இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் மற்றும் வல்லடிகாரர் கோவில் திருவிழாக்கள் ெதாடங்குவதற்கு முன்பு சாமி கும்பிடுவது வழக்கம். அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை பகுதியில் மான், மயில்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன.
இந்த மலையைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மலையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து அதனை வைத்து விவசாய பணிகள் நடந்து வருகிறது.
மேலும் இங்கே கால்நடை மேய்ச்சல் பகுதியும் உள்ளது. இங்கே சிட்கோ அமைத்தால் 66 கிராம மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் வன விலங்குகள், விவசாய நிலங்கள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும். எனவே சிட்கோவை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X