என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation"

    • குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர்.
    • சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க உள்ளது.
    • தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.இங்குள்ள வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகள் நாள் தோறும் நகராட்சி தூய்மை–பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான ஈசானியத்தெரு குப்பை உரகிடங்கில் கொட்டப்பட்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மைபணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காத குப்பைகள் வாங்க வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியதால் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள் வாங்கப்படுவதில்லை.

    அதேபோல் நகரில் சாலைகள் கொட்டப்படும் குப்பைகளையும் தரம் பிரித்து மட்டுமே உரகிடங்கிற்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என உத்தர–விடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே உள்ள தூய்மை பணியாளர்கள் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்து கொண்டு செல்லமுடியவில்லையாம்.

    இதனால் நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க முடியாமல் கடந்த 6 நாட்களாக கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல் தேங்கி அள்ளப்படாமல் கிடக்கிறது.

    இதனால் நகரில் கடும் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்–ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் கொட்டி தேங்கி கிடக்கும் குப்பைகளை கால்நடைகள கிளறி மேய்வதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது.

    தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொசுவினால் ஏற்படும் நோயை தடுக்கவேண்டிய நகராட்சி நிர்வாகமே, குப்பைகளில் உள்ள பிளாஸ்டி டீ கப்புகள், உடைந்த பாட்டில்கள், தேங்காய்மட்டைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை அள்ளி அப்புறப்படுதாமல் அலட்சியம் காட்டுவது நகர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    குப்பைகள் தரம் பிரித்து அள்ளுவது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்கள் கருஞ்சட்டை பேரணியில் ஈடுபட்டனர்.
    • 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் சுகாதார பிரிவில் நிரந்தர பணியாளர்கள், தொகுப் பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என பல்வேறு முறைகளில் 100 வார்டுகளிலும் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று காலை ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் காந்தி மியூசியம் முன்பு திரண்டனர்.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார பணியா ளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.

    பேரணி மதுரை மாநக ராட்சி அண்ணா மாளி கையில் நிறைவடைந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், தூய்மை பணியா ளர்களுக்கு எதிராகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசாணை எண் 152-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ. 172 வழங்க வேண்டும்.

    அனைத்து பணியாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 ஆண்டு காலமாக தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்று பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    • கப்பலூர் சிட்கோ பகுதியில் குப்பைகளை சரிவர அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
    • இதில் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில்

    500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிட்கோ இதுவாகும்.

    கடந்த சில மாதங்களாக சிட்கோவில் முக்கிய பகுதிகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    இங்கு பஞ்சுக்கழிவுகள், துணிமூடைகள், காகித குப்பைகள், பழைய இரும்பு கழிவுகள் உள்ளிட்டவை ேசர்ந்து காணப்படுகின்றன.

    இது குறித்து சிட்கோவில் நிறுவனம் நடத்திவரும் கதிரேசன் கூறுகையில், கப்பலூர் சிட்கோவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் பஞ்சாயத்தாக உச்சப்பட்டி பஞ்சாயத்து உள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சிட்கோவைப் பொறுத்தவரை பராமுகமாக இருந்து வருகிறது. குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை.

    இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் சிட்கோ தொழில்அதிபர் சங்கத்தில் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. குப்பைகள் அதிகமாக தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொழிலாளர்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது என்றார். சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறுகையில், மின்கட்டணம் செலுத்துதல், மாசுபரவாமல் இருக்க அடர்காடுகளுடன் மரங்கள் வளர்த்தல், இரவு நேர காவலாளி ஊதியம் உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

    இதுதவிர அனைத்து விதமான வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் குப்பைகளை அள்ள வருவதில்லை. சாலை வசதிகளை செய்துதர மறுக்கின்றனர்.

    இது சம்பந்தமாக திருமங்கலம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் செய்தோம். அவர் விரைவில் திருமங்கலம் யூனியனுக்கு பேட்டரி வாகனங்கள் வரவுள்ளன. அவற்றில் ஒன்றை சிட்கோவிற்கு குப்பைகள் அள்ள ஒதுக்கிதருவாக கூறியுள்ளார் என்றார்.

    • விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
    • சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொது சுகாதாரத் துறையின் சேவைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கம் ஆகும். ஒவ்வொரு மருத்து வர்களும், வட்டார மருத்துவர்களும் ஊராட்சி பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணி யாளர்களின் கருத்துக்களை பெற்று, முன்னுரிமை அடிப்ப டையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு மருத்துவமனை களில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து, சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தங்களது வட்டாரங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் சங்குமணி, இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி(விருதுநகர்), கலுசிவலிங்கம்(சிவகாசி), துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) கவுசல்யாதேவி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாச் சேரி தெரு திருவண்ணாமலை ஊராட்சியின் எல்லையில் உள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இங்கு பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக் களில் கழிவுநீர் தேங்குகிறது. கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவு நீர் வடியாமால் குடியிருப்பு களை சுற்றி தேங்கி நிற்கிறது.

    அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், சிறுவர் பூங்கா மற்றும் கோயில் அருகிலும் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தை கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே கழிவுநீர் கால் வாய்களை தூர்வார வேண் டும் என்றும், தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் திருவண்ணா மலை ஊராட்சி நிர்வாகத் திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
    • 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், கடைகள், பின்னலாடை தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டில் தனியார் நிறுவனம் மற்றும் மீதமுள்ள வார்டுகளில் மாநகராட்சி துாய்மை பணியாளர் வாயிலாகவும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உள்ளாட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை தனியார் வெளிச்சந்தை முறையில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி தினமும் 573.55 மெட்ரிக் டன் குப்பை அகற்ற டன்னுக்கு 3,860 ரூபாய் என்ற அடிப்படையில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தினமும், 22.16 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 96 கோடி ரூபாய் தூய்மைப் பணிக்கு செலவிடப்படும். மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதனை முறைப்படி கையாள வேண்டும்.

    மாநகராட்சியை பொருத்தவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையாக தனியார் மயமாக்கப்படும் நிலையில் இந்த வாகனங்கள் அனைத்தும் வாடகை அடிப்படையில் அதே நிறுவனத்துக்கு வழங்கப்படும்.பேட்டரி வாகனங்கள், 80 இலகு ரக வாகனம், 7 கனரக வாகனம், 12 காம்பாக்டர் மற்றும் 1,099 குப்பை தொட்டிகளும் அந்நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதற்கான வாடகை தினமும் 95,285 ரூபாய் பில்லில் பிடித்தம் செய்யப்படும்.இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 1.71 லட்சம் வீடுகளில் நேரடியாக பேட்டரி வாகனங்கள் மூலமும், 1.14 லட்சம் வீடுகளில் இலகு ரக வாகனம் மூலமும் குப்பைகளை தரம் பிரித்துப் பெற்று செயலாக்க மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவர்.

    இதுதவிர 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள், 9,500 பெரிய நிறுவனங்களில் கழிவு சேகரிப்பர். பிரதான ரோடுகள் 688 கி.மீ., மற்றும் 19 கி.மீ., தெருக்களிலும் தூய்மைப் படுத்தும் பணியில் அந்நிறுவனம் மேற்கொள்ளஉள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பகுதி வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை தினமும் வழங்கப்படுகிறது. இதுதவிர 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் நடக்கிறது.

    தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 2 கோடி லிட்டர், 3 வது குடிநீர் திட்டத்தில் 10 கோடி லிட்டர் என்ற அளவில் தற்போது குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. தற்போது 4வது குடிநீர் திட்டத்தில் சோதனையோட்டத்தில் கடந்த வாரம் வரை 46 கோடி லிட்டர் பெற்று வழங்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் பெருமளவு சோதனையோட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அங்குள்ள 18 மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, திட்டம் செயல்படும் விதமாக குடிநீர் சப்ளை துவங்கப்பட்டு விட்டது. அவ்வகையில் தற்போது சராசரியாக தினமும், 5 கோடி லிட்டர் என்றளவில் குடிநீர் வினியோகமாகிறது.

    அவ்வகையில் இதற்கு முன் சப்ளை செய்யப்பட்ட 2 மற்றும் 3வது குடிநீர் திட்டங்களின் குடிநீர் தெற்கு பகுதிக்கு வழங்கப்படும். இதுதவிர தெற்கு பகுதியில் கட்டி முடித்து தயார் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அடுத்த கட்டமாக வெள்ளோட்டம் நடத்தி குடிநீர் வழங்கப்படும்.அனைத்து வார்டுகளிலும் பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறு மோட்டார்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலான கிணறுகள் அமைக்க கவுன்சிலர்களிடம் விவரம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி மேற்கொள்ளப்படும்.குழாய் சேதம், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் உடனடியாக குடிநீர் வழங்கும் விதமாக 18 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன.மாநகராட்சி பகுதியில் குழாய் சேதம் போன்ற காரணங்களால் குடிநீர் வீணாவது மற்றும் வினியோகம் தடைப்படுவது போன்றவை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
    • 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

    இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.

    17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

    • குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
    • ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவலூர்செல்லும் ரோட்டில்அப்பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள் ஆகியவைகளில் இருந்து குப்பைகள், மற்றும் கழிவுகளை ரோட்டு ஓரங்கள் மற்றும் கோவில் பகுதிகளில் கொட்டிச் சென்று விடுகின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- இப்பகுதியை சேர்ந்த அனைத்து குப்பைகளும் தினசரி இங்கு கொண்டு வந்து கொட்டப்படுவதால் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்துடன் கூறி யும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.
    • நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள் ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.

     இதனால் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பன் றிகள் சுற்றி திரிவதால் துர் நாற்றம் வீசி, பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. மேலும் சுகதார சீர்கேடு ஏற்படுவதுடன் குழந்தைகள், பெரியோர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    இதுசம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. விடம் பன்றிகளை அப்புறப்ப டுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

     அதன்பேரில் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை நகராட்சி ஆணை யர் சிவக்குமாரை நேரில் சந்தித்து பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தார்.

    தொடர்ந்து நேதாஜி நகர் அவ்வை தோட்டத் தில் கல்யாண மண்டபம் கட்டும் பணி, குபேர் மண் டபம் கட்டமைப்பு பணி, சின்ன மணிகூண்டு புதுப் பித்தல் பணியை விரை வாக தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு ஆணையர் நடவ டிக்கை எடுப்பதாக உறு தியளித்தார்.

    அப்போது தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது.
    • வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது. மேலும் குறிப்பாக இந்த வீராணம் ஏரியிலிருந்து சென்னை வாழ்மக்கள் குடிநீருக்காக தினமும் தண்ணீர் செல்கிறது. 

    தற்போது கோடை வெயில் முடிந்த நிலையிலும் குறையாத வெப்பத்தின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிருந்து சென்னை குடிநீருக்கு ஒரு நாளைக்கு அதிகமான கனஅடி அளவு தண்ணீர் அனுப்பப்பட்ட நிலையில் தண்ணீர் குறைந்து வரும் காரணத்தால் தற்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் சென்னைக்கு அனுப்பும் குடிநீர் சுகாதாரமாக அனுப்பப்படுகிறதா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. ஏரியின் கரையோரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு துர்நாற்றம் வீசிகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • கழிவுநீர் நெல் வயல்களில் புகுந்து விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
    • சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் கிராமம் உள்ளது. முற்றிலும் நெல் விவசாயம் நடைபெறும் கிராமம் இது. இந்த கிராமத்தில் இருந்து வரகூர் செல்லும் தார் சாலையில் ஓரத்தில் விவசாய விளைநிலங்களுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீர் அதன் அருகில் உள்ள நெல் வயல்களில் புகுந்து விடுவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயி தெரிவிக்கின்றார்.

    எனவே கண்டமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கும் வாய்க்காலை பார்வையிட்டு கழிவு நீரை அகற்றி சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×