search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பன்றிகளால் சுகாதார சீர்கேடு
    X

    உப்பளம் தொகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றிதிரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.

    பன்றிகளால் சுகாதார சீர்கேடு

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.
    • நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள் ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.

    இதனால் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பன் றிகள் சுற்றி திரிவதால் துர் நாற்றம் வீசி, பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. மேலும் சுகதார சீர்கேடு ஏற்படுவதுடன் குழந்தைகள், பெரியோர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    இதுசம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. விடம் பன்றிகளை அப்புறப்ப டுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதன்பேரில் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை நகராட்சி ஆணை யர் சிவக்குமாரை நேரில் சந்தித்து பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தார்.

    தொடர்ந்து நேதாஜி நகர் அவ்வை தோட்டத் தில் கல்யாண மண்டபம் கட்டும் பணி, குபேர் மண் டபம் கட்டமைப்பு பணி, சின்ன மணிகூண்டு புதுப் பித்தல் பணியை விரை வாக தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு ஆணையர் நடவ டிக்கை எடுப்பதாக உறு தியளித்தார்.

    அப்போது தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×