search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் பகுதியில் மழை பெய்தபோது எடுத்த படம்.
    X
    திருமங்கலம் பகுதியில் மழை பெய்தபோது எடுத்த படம்.

    திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி

    திருமங்கலம் பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    திருமங்கலம்

    கடந்த சில நாட்களாக  அக்னி வெயில் கொளுத்தி வந்த  அக்னி நட்சத்திரம் நேற்று முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென மதுரை மாவட்டத்தில் பல இடங்க ளில் பலத்த மழை பெய்தது.

    திருமங்கலம், சாத்தங்குடி, கப்பலூர்,மேலக்கோட்டை, உச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்து அவதிபட்டனர்.

     மேலும் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுகுளு காற்று வீசியது.கோடை காலத்திலும் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×