search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathyamangalam"

    • பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு.
    • பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா’ புகழ்பெற்றது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்ற ஊரில் உள்ளது, பண்ணாரி அம்மன் கோவில். ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இது பார்க்கப்படுகிறது. இங்கு பண்ணாரி அம்மன், சுயம்புவாக லிங்க வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ணாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை இருக்கிறாள். பொதுவாக அம்மன் ஆலயங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயம் தெற்கு நோக்கி உள்ளது.

    தல வரலாறு

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக, இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. அப்போது இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இப்பகுதியில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். தோரணப்பள்ளம் என்ற அந்தக் காட்டாறு, இவ்வாலயம் அமைந்த இடத்திற்கு மேற்கு புறத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பலரும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    அவர்கள் வனப்பகுதியிலேயே மாடுகளுக்கு பட்டிகளை அமைத்திருந்தனர். காலையில் அந்த வனத்திற்குள் மாடுகளை மேய விட்டு விட்டு, மாலையில் பட்டியில் அடைத்து, தாங்களும் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அதோடு காலையிலும், மாலையிலும் பசுக்களிடம் இருந்து பாலைக் கறந்து, அதன் உரிமையாளர்களிடம் சேர்த்துவிடுவர். அப்போது ஒரு பட்டியில் இருந்த காராம்பசு ஒன்று, பால் கறப்பதற்குச் சென்றால், பால் சுரக்காமலும், தன்னுடைய கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை அந்தப் பட்டியை பராமரிப்பவன் அறிந்தான்.

    அவன் மறுநாள் அந்த காராம் பசுவை பின் தொடர்ந்தான். அந்தப் பசுவானது, ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலை தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான். இந்நிகழ்வைக் கண்ட அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் நடந்ததைப் பற்றி விவரித்தான். அவர்கள் மறுநாள், பசுவை பின் தொடர்ந்து

    குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு அதே இடத்தில் பசு தன்னுடைய பாலை தானாக சுரப்பதை அனைவரும் கண்டனர். இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பசு அங்கிருந்து அகன்றதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கணாங்கு புற்களை அகற்றியபோது, அங்கே வேங்கை மரத்தின் அடியில் ஒரு புற்றும், அதன் அருகில் சுயம்பு லிங்க திருவுருவமும் இருப்பதைக் கண்டனர்.

    அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் அருள் வந்து, தெய்வ வாக்கை கூறினார். "நான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரில் இருந்து பொதி மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன். இங்கு காணப்படும் எழில் மிகுந்த இயற்கைச் சூழலில் லயித்து, இங்கேயே தங்கி விட்டேன். என்னை பண்ணாரி மாரியம்மன் என்ற பெயரில் போற்றி வழிபடுங்கள்" என்றார்.

     பின்னர் அன்னையின் அருள்வாக்குப்படி அந்த இடத்திலேயே கணாங்கு புற்களைக் கொண்டு ஒரு குடில் அமைத்து, கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபாடு செய்து வந்தனர். பின்பு ஊர் மக்களும், பண வசதி படைத்தவர்களும் கூடிப் பேசி, அம்மனுக்கு விமானத்துடன் கூடிய கோவிலை அமைத்தனர். அந்த ஆலயத்தில் பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு செய்யத் தொடங்கினர்.

    தற்போதைய பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அழகிய கோபுரத்துடனும், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றுடன் அழகிய சிற்பங்களைக் கொண்டு கண்கவர் ஆலயமாக பொழிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா' புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் விபூதி பிரசாதம் கிடையாது. அதற்கு பதிலாக புற்று மண்தான், விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அம்மை நோய் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தை வரம், வேலைவாய்ப்பு வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கிய ஆலயமாக இந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கிச் சென்று, அம்மை நோய் பாதித்தவர்களின் மீது வைத்தால், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள். திருமண பாக்கியம் கைகூடாதவர்கள், கை- கால் உறுப்பு குறைபாடு உள்ளவர்கள், விவசாயம் செழிக்க வேண்டுவோர், இவ்வாலய அம்மனை வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடும்.

    இவ்வாலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்கள், உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி, அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள். மேலும் அக்னி குண்டம் இறங்குதல், வேல் எடுத்து சுத்துதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக, ஆராதனைகள் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     அக்னி குண்டம் இறங்கும் விழா

    இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் விழா, மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்னி குண்டம் ஏற்படுத்துவதற்காக பக்தர்கள் காட்டிற்குச் சென்று மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்பார்கள்) எடுத்து வந்து, மலைபோல் குவித்து, அதனை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக தயார் செய்வார்கள். அந்த குண்டத்தில் முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார்.

    பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், நடை சாற்றும் வரை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருப்பார்கள். பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

    அமைவிடம்

    சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி திருத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து 77 கிலோமீட்டர், கோவையில் இருந்து 82 கிலோமீட்டர், திருப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர், சேலத்தில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் இருக்கிறது.

    • பக்தர்கள் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன்.
    • குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து 19-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை காணிக்கை யாக செலுத்தி வந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. குண்டம் இறங்குவ தற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     இதையடுத்து சரியாக அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கு தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து வீதி உலா கொண்டு செலல்ப்பட்ட சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

    அதை த்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறகினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

     தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.

    நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ந் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.
    • மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. பொதுவாகவே கொங்குமண்டலத்தை பொறுத்தவரை எல்லை காவல் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் அதிகமாகவே போற்றி வணங்குவார்கள்.

    அந்த வகையில் சக்தி பண்ணாரி மாரியம்மன் தமிழ்நாட்டில் இருந்து, கர்நாடகா மலையேற்றப்பகுதியில் காவல் தெய்வமாகவும், நீங்காத புகழ் கொண்ட பெண் தெய்வமாகவும் விளங்கிவருகிறது. இக்கோவிலின் கம்பீரமான தோற்றமும், விசாலமான நிலப்பரப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    சுற்றிலும் வனப்பகுதி, சுற்றித் திரியும் சிறிய வகை வன உயிரினங்கள், அரணாக மலை, அரண்மனை போல கோவில் இப்படி வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.

    தலவரலாறு

    பண்ணாரி மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் சலவைத் தொழில் செய்யும் தம்பதி தங்களின் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலையின் கீழ் அமைந்து இருந்த ஆற்றுக்கு அவற்றை எடுத்து சென்றனர். அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

    சலவைத் துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது.

    பின்னர் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை. பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.

    பின்னர் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு ரத்தம் கசிந்துள்ளது. (அதை இன்றளவும் நாம் பூஜையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்). அந்த தாழியின் உள்ளையே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது.

    அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. அதன்பிறகு ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.

    அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண், தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையை கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தாள். அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது என்றும் நம்பப்படுகிறது.

    இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது. மேலும் கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம்.

    இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும்.

    பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்த கிணறும் உள்ளன.

    • கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் கீர்த்தனாவை (23) கடந்த ஜூன் மாதம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தானர்.

    இந்நிலையில் கீர்த்தனா மற்றும் கார்த்திக் இருவரும் தலை ஆடி கொண்டாடுவதற்காக கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு கீர்த்தனா மற்றும் கார்த்திக்கை கோபாலகிருஷ்ணன் சரிவர கவனிக்காததால் கோபமடைந்த கார்த்திக் மற்றும் கீர்த்தனா சத்தியமங்கலத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கோபாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இதகுறித்து புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதில் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பண்ணாரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    பாரத பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பொதுமக்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பெறலாம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த சேவை, மக்களுக்கு சேவை, ஏழை, எளிய மக்களின் நலன் என செயல்படுவதாகவும், அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி.

    ஏழை, எளிய மக்களுக்கும் உலக தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.இந்தியாவின் 100-வது சுதந்திர ஆண்டிற்குள் உலகிலுள்ள அனைத்து நாட்டிற்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து வரும் நீலகிரி பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து பவானிசாகர் தொகுதி மண்டல தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோ சனை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    மேலும் புளியம்பட்டி நகராட்சி பகுதி சாயப்பட்டறைகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர கோரி மனு அளித்தனர். மலை கிராம பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் மனு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி பவானிசாகர் மண்டல் சார்பாக ஈஸ்வரமூர்த்தி, தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் சதீஷ்குமார், சந்திரசேகர், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், வர்த்தக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் நீரா பாலகிருஷ்ணன்,

    விவசாய அணி மாவட்ட பொதுச்செ யலாளர் ரகு சூர்யா, இளை ஞரணி தலைவர் லட்சும ணன், செயலாளர் வேலு ச்சாமி, துணைத்தலைவர் தீபா சாகர், சமூக ஊடக மாவட்ட துணை த்தலைவர் தங்கவேல், ஒன்றிய துணைத்தலைவர் சின்ராஜ், வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் சரவணன்,

    மாவட்ட பொதுச் செயலா ளர் சக்திவேல், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் கந்தவேல், ஆன்மீக பிரிவு தலைவர் மற்றும் புளி யம்பட்டி நகர சார்பில் நகரத்தலைவர் தங்கமணி உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க. தலைவர்கள், பொறு ப்பாளர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நள்ளிரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் அரசு மருத்துவ மனையில் செயல்படும் பொது மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நலமருத்துவம்,

    மகப்பேறு மருத்துவப் பிரிவு மற்றும் 24 மணிநேரம் மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவான சீமாங் சென்டர் ஆகிய பிரிவுகளையும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

    மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இரவு நேர பணியில் இருக்கும் மருத்து வர்களின் விபரங்கள் குறி த்தும் கேட்டறிந்தார்.

    முன்னதாக மருத்துவமனையில் செயல்படும் மருந்து இருப்பு அறை மற்றும் மருந்தகத்தி னையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலி யர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.
    • இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவு 2023-2024-ம் கல்வி ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 2023-2024-ம் கல்வியாண்டு முதல் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இளங்கலை பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.

    மேல்நிலை கல்வியில் (பிளஸ்-2) உயிரியல் அல்லது தாவரவியல் பயின்ற மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வரும் 19-ந் தேதி ஆகும்.

    மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 9363462099 என்ற கல்லூரி கல்வி இயக்க அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேலும் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இதற்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரடியாக வந்திருந்து தங்களது சுய விவரங்களை தெரிவித்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

    எனவே ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து சேர்க்கை பெற்று பயனடையுமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    • இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்குபேட்டை, கெஞ்ச னூர் உள்பட 59 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 31-ந் தேதி பிரதி ஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி முன்னதாக சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வர ப்படுகிறது.

    இதை தொடர்ந்து பஸ் நிலையம் பகுதி, ஆற்று பாலம், பழைய மார்க்கெட், கோட்டு வீராம்பாளையம், பெரிய பள்ளிவாசல் வீதி வரதம்பாளையம் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

    இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு சத்தியமங்கலம் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இதையொட்டி சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்கள் பொதுமக்கள் சிைலகளை கரைக்கும் போது அரசு அறிவித்து உள்ள பாதுகாப்பு வழி முறை களை கடை பிடிக்க வேண்டும். ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் இன்று மாலை 3 மணிக்கு அந்தியூர் ஈரோடு ரோட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அத்தாணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    இதனை அடுத்துபவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, ஏ.டி.எஸ்.பி. கணகேஸ்வரி ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் 180 போலீசார் என 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்ப நாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அத்தியப்பகவுண்டன்புதூர், சின்னட்டிப்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், இண்டியன் பாளையம், காளிகுளம், குப்பந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்க தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பெரும்பாலான செங்கல் சூளைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மண் தீர்ந்த நிலையில் தற்போது புதியதாக செங்கல் தயார் செய்ய தேவைப்படும் மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்காததால் தற்போது சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு–றியாகி உள்ளது.

    இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில் செங்கல் தயாரிப்பதற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த போதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று மண் எடுக்க அனுமதி வழங்குமாறு கேட்டால் இன்னும் எங்களுக்கு சுற்றறிக்கை வரவில்லை என தெரிவிக்கின்றனர்.

    இதனால் தற்போது செங்கல் சூளைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வா–தாரம் கேள்விக்குறியா–கியுள்ள நிலையில் அவர்களின் குழந்தைகளின் கல்விகளும் பாதிக்கப்பட்டு–ள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம், அரசு இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் செங்கல் தயாரிப்பதற்காக தேவைப்படும் மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

    மேலும் வேலைக்கு செல்பவர்களும் சாரல் மழையில் நனைந்த படி வேலைக்கு சென்றனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    சத்தியமங்கலத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரிகளிடம் ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பகல், இரவு என விடிய விடிய அதிரடி வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிப்பட்டி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் நள்ளிரவில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஊட்டியில் இருந்து ஈரோடு வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் இருந்த மாட்டு வியாபாரி அப்துல் மஜித் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் இருந்தது.

    இந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் சத்தியமங்கலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் மேடு என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி நாகேந்திரன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தீனதயாளன் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த ஒரு காரில் வாழைக்காய் வியாபாரி மகேந்திரனிடம் (29) ரூ.95 ஆயிரம் இருந்தது.

    இவர் வாழைக்காய் விற்ற பணத்தை கொண்டு வருவதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதே இடத்தில் மற்றொரு வேனை பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது அந்த வேனில் வந்த காய்கறி வியாபாரி புளியம்பட்டியை சேர்ந்த முகமது ஜக்காரியா (37) என்பவரிடம் ரூ.96 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.

    அவர் காய்கறி விற்று வாங்கிய பணம் என கூறினார். எனினும் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் காரில் வந்தவர்களிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்தனர். #LSPolls
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி தீனதயாளன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 3 பேர் இருந்தனர். கூடலூரில் இருந்து ஈரோட்டில் நடக்கும் மாட்டு சந்தைக்கு இவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் நடத்திய சோதனையில் பிரதீஸ் குமார் என்பவரிடம் ரூ.60 ஆயிரம், எல்டாஸ்பால் என்பவரிடம் ரூ.52 ஆயிரம் மற்றும் தினேஷ் (31) என்பவரிடம் ரூ.56800 என ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 300-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மாட்டு சந்தைக்கு வந்த வியாபாரிகளான இவர்களிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அந்த பணத்தை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    ×