search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalavadi"

    • கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
    • தாளவாடி பாரதிபுரத்தில் இயங்கி வரும் டாஸ்டாக் மதுக்கடை 3 நாட்கள் மூடப்படும்.

    ஈரோடு:

    கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் பணியிலும் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதையொட்டி கர்நாடகாவில் வரும் 8-ந் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் வரும் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மது கடைகள் மூட தேர்தல் அதிகாரிகள் உத்த ரவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அந்த மாநில தேர்தல் அதிகாரிகள் தேர்தலை யொட்டி தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள மது கடைகள் மூட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அதில் வரும் 10-ந் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 8-ந் தேதி மாலை முதல் 10-ந் தேதி வரை மது கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மது க்கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதையொட்டி தமிழக- கர்நாடகா எல்லையான 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாளவாடி பாரதி புரத்தில் இயங்கி வரும் தமிழக அரசின் டாஸ்டாக் மதுக்கடை வரும் 8-ந் தேதி மாலை முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது.
    • குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை மற்றும் குண்டேரிப்பள்ள ம்அணை, பெரும்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம் அணை, மற்றும் பல்வேறு குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இதன் காரணமாக திம்பம், தாளவாடி, பர்கூர் மலை பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. பச்சை போர்வை விரித்தாற் போல் மலை பகுதிகள் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    நேற்றுமழை நின்றுவிட்டதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது. குறிப்பாக தாளவாடி, திம்பம், பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் கடுங்குளிரும், கடுமையான பனியும் நிலவியது.

    இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மலை கிராமங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர். குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.

    மலை பகுதிகளில் இருந்து சமவெளி பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ×