search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளவாடியில் டாஸ்மாக் கடைக்கு 3 நாட்கள் விடுமுறை
    X

    தாளவாடியில் டாஸ்மாக் கடைக்கு 3 நாட்கள் விடுமுறை

    • கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
    • தாளவாடி பாரதிபுரத்தில் இயங்கி வரும் டாஸ்டாக் மதுக்கடை 3 நாட்கள் மூடப்படும்.

    ஈரோடு:

    கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் பணியிலும் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதையொட்டி கர்நாடகாவில் வரும் 8-ந் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் வரும் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மது கடைகள் மூட தேர்தல் அதிகாரிகள் உத்த ரவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அந்த மாநில தேர்தல் அதிகாரிகள் தேர்தலை யொட்டி தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள மது கடைகள் மூட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அதில் வரும் 10-ந் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 8-ந் தேதி மாலை முதல் 10-ந் தேதி வரை மது கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மது க்கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதையொட்டி தமிழக- கர்நாடகா எல்லையான 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாளவாடி பாரதி புரத்தில் இயங்கி வரும் தமிழக அரசின் டாஸ்டாக் மதுக்கடை வரும் 8-ந் தேதி மாலை முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    Next Story
    ×