என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
- அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நள்ளிரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் அரசு மருத்துவ மனையில் செயல்படும் பொது மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நலமருத்துவம்,
மகப்பேறு மருத்துவப் பிரிவு மற்றும் 24 மணிநேரம் மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவான சீமாங் சென்டர் ஆகிய பிரிவுகளையும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இரவு நேர பணியில் இருக்கும் மருத்து வர்களின் விபரங்கள் குறி த்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக மருத்துவமனையில் செயல்படும் மருந்து இருப்பு அறை மற்றும் மருந்தகத்தி னையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலி யர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்