search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state"

    • ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.
    • அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.

    இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.

    அவர் டீன் பிலிப்ஸ், மரியன்னே வில்லியம்சன் உள்ளிட்டோரை தோற்கடித்தனர். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.

    • பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலா ளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலை மையில், இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்ட போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    பிற மாநில தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த போலீஸார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .
    • அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கந்தம்பாளையம், கபிலர்மலை, சோழசிராமணி, பாண்டமங்கலம், வெங்கரை, கொளக்கட்டுபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள், செங்கல் சேம்பர்கள், வெல்லஉற்பத்தி ஆலைகள் ,கிரானைட் மற்றும் டைல்ஸ் பதிக்கும் வேலை, மற்றும் பல்வேறு தொழில்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களுக்கு எதிரான செயல்கள் நடப்பது போன்ற தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் ஏற்பட்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அவர்கள் பணியாற்றும் தொழில்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க மாநில இணை செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வதந்தி பரவி வருவதால் வெளி மாநிலத்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களை தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அழைத்து உங்களுக்கு முழு பாதுகாப்பு நாங்கள் அளிக்கிறோம். வதந்திங்களை நம்ப வேண்டாம் என எங்கள் சார்பாகவும் பரமத்திவேலூர் போலீசார்சார்பாகவும் நேரில் அழைத்து பேசினோம்.

    அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை தற்போது நிறுத்தி உள்ளனர். மேலும் இங்கிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற வெளிமாநிலத்தினர் திரும்பி வருவது குறித்து அச்சத்தில் உள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வதந்திகளை நம்ப வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என தெரிவித்தோம்.

    மேலும் பரமத்தி வேலூர் தாலுகாவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் வெளிமாநிலத்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பரமத்திவேலூர் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கூறும்போது, வெளி மாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு காரணங்களை கூறி காலி செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும்.வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.
    • பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ராசிபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல், ராசிபுரத்தில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை முருகேசன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

    இதில் ஒன்றிய பொறுப்பாளர்களாக 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குணவதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லட்சுமி வரவேற்றார். மாவட்ட மகிளர் அணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன், பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், தணிக்கை குழு உறுப்பி னர் தண்டபாணி, நாமகி ரிப்பேட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சிதம்பரம், இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயவேல் ஆகியோர் பேசினர்.

    இதில், தேர்தல் வாக்கு றுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மற்றும் முழுநேர கணினி இயக்குபவர் நியமனம் செய்ய வேண்டும்.

    பள்ளிகளில் சுகாதா ரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியா ளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆரோக்ய மேரி நன்றி கூறினார்.

    • மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    மேற்கு வங்காளம் நடியா மாவட்டம் சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 3 மகள்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதேபோல் ஜெந்துசிங் (26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் 3 மகன்கள் உள்ளனர்.

    இதனையடுத்து ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருகின்றனர். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டு உள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் ராம் (வயது 42). இவரும் இவருடைய அண்ணன் தினேஷ் ராம் என்பவரும் பெருந்துறை, சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு உமேஷ் ராம் தொழிலாளர்கள் தங்கம் அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொழிலாளர் போர்வையில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலர் மக்களோடு மக்களாக கலந்துள்ளனர்.
    • மாநகர போலீசார், புதிய சாப்ட்வேர் ஒன்றை தயார் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலத்தவர் வேலை வாய்ப்புக்காக திருப்பூரில் தங்கியுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். தொழிலாளர் போர்வையில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலர் மக்களோடு மக்களாக கலந்துள்ளனர்.இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகர போலீசார், புதிய சாப்ட்வேர் ஒன்றை தயார் செய்தனர்.

    தொழில்துறையினரின் ஒத்துழைப்போடு வெளி நாடு, மாநிலத்தை சேர்ந்த 28 ஆயிரம் பேர், புறநகரில், 7 ஆயிரம் பேர் என 35 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். பின் மீண்டும் வர துவங்கினர். இதனால் புள்ளிவிவரங்கள் முறையாக இல்லாமல் இருந்தது.

    கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில் நகரங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை வருவாய்த்துறை, போலீசார், தொழிலாளர் நலத்துறை இணைந்து விவரம் சேகரிக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருப்பூரில் போலீஸ் நிலையம் வாரியாக உள்ள நிறுவனங்கள், ஓட்டல், கடைகளில் வேலை செய்யும் வெளிமாநில, மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர் விவரம் சேகரிக்கும் பணியை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.அதில் பெயர், பாலினம், வயது, பெற்றோர், மனைவி பெயர், செல்போன் எண், சொந்த மாநிலம், மாவட்டம், அடையாள சான்று, தங்களை அழைத்து வந்த ஏஜென்ட் குறித்த விவரம், பணி செய்யும் இடம், ஏற்கனவே அவர்கள் மீதுள்ள குற்ற வழக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    கடந்த 2 மாதம் முன்பு தொழிலாளர் நலத்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி மாவட்டத்தில் பனியன் நிறுவனம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த 153 கான்ட்ராக்டர் விவரம் பெறப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பாபு கூறியதாவது:-

    விவரம் சேகரிப்பு பணிக்கு விவரங்களை பதிவு செய்ய என்னென்ன விவரங்களை பெற வேண்டும், அதனுடன் ஆவணங்களை இணைக்கும் வகையில், படிவம் ஒன்று தயார் செய்யப்பட்டு அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பனியன் நிறுவனம், வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டது.இதன் மூலம் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேரின் விவரம் சேகரிக்கப்பட்டது. இப்பணி தொடர்கிறது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இதற்காக ஒரு பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் விவரங்களை, சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. அதுபோக படிவத்தில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இன்னும் வேறு எந்த வகையில் எல்லாம் விவரங்களை சேகரிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் மாநில அளவிலான கோடைகால கபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் 5-ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெற்றது.

    நிறைவு விழாவில் அமைச்சரும், தூத்துக் குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது:-

    கபடி விளையாட்டில் சாதனை படைத்தது சன் பேப்பர் மில். அர்ஜுனா விருது பெற்ற வீரர்கள் கன்னியாகுமரி ராஜரத்தினம், மணத்தி கணேசன் ஆகியோரை உலகிற்கு அடையாளப்படுத்தியது கபடி.

    விளையாட்டு அகடமி விரைவில் இப்பகுதியில் தொடங்கப்படும். மேலும் கல்லூரி பள்ளி மாணவ- மாணவிகள் தாங்கள் படிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகள் கிடைப்பதற்கு உரிய வழிமுறைகள் பெற்றுத் தரப்படும். அரியானாவில் எப்படி வீரர்கள் உருவாக்கப்படுகிறார்களோ அதே போன்று தமிழகத்திலும் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்.

    விளையாட்டு வீரர்கள் தங்களது முயற்சியை கை விட்டு விடக்கூடாது. விளையாட்டு போதைப் பொருட்களிலிருந்து அடிமையாவதை தடுக்கும். எனவே அனைவரும் சீரிய முறை யில் பயிற்சிகள் மேற்கொண்டு விளையாட் டில் மென் மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்விற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கி பேசியதாவது: -

    கபடி விளையாட்டு தேசிய அளவில் 1972-லும் உலக அளவில் 2004-லும் இந்திய அளவில் மகளிர் 2005-லும் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பதற்கு மூன்று முக்கிய கோட்பாடுகளை கையாள வேண்டும். ஒன்று ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ வேண்டும் தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை அதன் நுணுக்கங்களை கற்று ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும்.

    இரண்டாவது தாயையும் தகப்பனையும் கனம் பண்ண வேண்டும். கனம் பண்ணும் போது உங்களுக்கு சந்தோஷம், சமாதானம் கிடைக்கும். மூன்றாவது உண்மையுள்ள மனிதன் உயர்த்தப்படுவான் என்று வேத வசனத்தின்படி உண்மையுடன் நடக்க வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளை நீங்கள் கை கொண்டு நடந்தால் விளை யாட்டுத்துறையில் நீங்கள் உலகளவில் சாதிக்கலாம் என்று பேசினார்.

    விழாவில் முகாம் பொறுப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், முகாம் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார்,விளையாட் டுத்துறை பொறுப்பாளர் எட்வின், திமுக மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன்,

    தொழிலதிபர் ஜி ஆர் ரமேஷ் கிருஷ்ணன் டாக்டர் அன்பு ராஜன் நடுவர் குழு சேர்மன் கண்ணன் கன்வீனர் நடுவர்கள் மைக்கேல், அசோக்,அர்ஜுனன் பொன்னையா சாமுவேல், ஜானகிராமன், வேல்மணி, சிவா,மந்திரம், தமிழ்மணி, அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயேசுவிடுவிக்கிறார் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் அன்புராஜன் நன்றி கூறினார்.

    முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபடி கழகமும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும் புதுவாழ்வு சங்கமும் இணைந்து செய்திருந்தனர்.

    • சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
    • உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

    சென்னிமலை, ஜூன். 13

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி ரோடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது மலைப்பாதை ரோடு முதல் வளைவு பகுதியில் 65 வயது மதிக்க த்தக்க ஒரு முதியவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதிய வர் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது.

    ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை! தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை! பெரும்பான்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது.

    கூடுதலாக, மே 19-ம் நாள் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது.

    ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

    மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

    பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு சற்றும் சளைக்காத அடிமை அ.தி.மு.க. ஆட்சியும் ஏற்கனவே தனது மெஜாரிட்டியை இழந்து விட்ட நிலையில், மத்தியில் பா.ஜ.க. அரசை மக்கள் வீழ்த்தும்போது மாநிலத்தில் தனது ஆட்சியும் சேர்ந்தே தானாகவே வீழும் என்பதை அறிந்திருக்கிறது.

    அத்துடன், 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் புதிய ஆக்கபூர்வமான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்பதால்தான், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடங்கி, பேரவைத் தலைவரின் அக்கிரம நோட்டீஸ் வரை ஜனநாயக விரோத செயல்பாடுகளின் அராஜகமான உச்சகட்டத்திற்குத் திட்டமிடுகிறது. அதனை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வுக்கும் அதன் தலைமையிலான கூட்டணிக்கும் இருக்கிறது. நம்மைவிட அதிகமான ஆர்வத்துடன் வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்கள்.

    கோடைக்காலத்தில் கொளுத்துகின்றது அக்கினி வெயில். வறண்டு கிடக்கின்றன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள். மக்களின் தண்ணீர் தாகத்தைக்கூட தீர்க்கும் யோக்கியதை இன்றி ஒரு ஆட்சி பெயருக்கு நடந்து கொண்டிருக்கிறது. காலிக் குடங்களும், கண்ணீருமாக நெடுந்தூரம் கவலையையும் சுமந்து நடக்கிறார்கள் தாய்மார்கள்.

    அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் உயிரில்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலேயே ஒட்டு மொத்தமாக டெண்டர் கொள்ளை அடிப்பது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது கமி‌ஷன்- கரப்‌ஷன் கலெக்சனைக் கொள்கையாகக் கொண்ட கொள்ளைக்கூட்ட அரசு. ஒரு குடம் குடிநீர் தர வக்கற்ற ஆட்சி நீடிப்பதை வாக்காளர்கள் எப்படி விரும்புவார்கள்? விலை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்கிற நயவஞ்சக ஆட்சியாளர்களை நம்புவதற்கு தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.

    மக்களின் பேராதரவால் ஏற்கனவே தமிழகம்- புதுவை மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நமது வெற்றியை, முழுமையானதாக்க 100 சதவீத வெற்றியாக மாற்றிட 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் இடைவிடாமல் முழுவீச்சுடன் பணியாற்றிட வேண்டுகிறேன்.

    இது 4 தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்கள் உடன்பிறப்புகளுக்கு மட்டுமான வேண்டுகோள் அல்ல. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மற்ற தொகுதிகளில் உள்ள உடன்பிறப்புகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி 4 தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பரப்புரையை மேற்கொள்ள முடியும். ஜனநாயக முறையில் உதய சூரியனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம்.

    நம்மை வெற்றி பெறச் செய்ய மக்கள் விரும்பி ஆயத்தமாக இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும்.

    ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப் போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    மாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறலாமா? என மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #TamilisaiSoundararajan #BJP

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் வேட்பாளர் ராகுல் என்று முன்மொழிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் கூட்டணி மேடையில், கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் அதை சொல்ல பயந்தது ஏன்? மாநிலம் மாறினால் நிறம் மாறும் ஸ்டாலின். விஞ்ஞானபூர்வமான ஊழல் கண்டுபிடிப்பு பட்டயம் வாங்கிய தி.மு.க. வாரிசு ஊழல் பற்றி பேசலாமா?

    ஒரு ரூபாய்க்கு படி அரிசி! மூன்று படி லட்சியம். ஒருபடி நிச்சயம் என பொய்யுரைத்த தி.மு.க. உண்மை விளம்பிகள் மோடி பொய்யுரைத்தார் என்பதா?

    மோடி ரூ.15 லட்சம் போடுவேன் என்று எங்கு? எப்போது சொன்னார்? சான்று காட்ட முடியுமா?

    வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணம் மட்டுமில்லாமல் உள்நாட்டிலும் பதுக்கி வைத்திருக்கிற கருப்பு பணத்தை மீட்டால் அது ஒரு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் அளவுக்கு வரும் என்றார். அதில் ரூ.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டமாக வந்துள்ளது. இன்னும் 10 அல்லது 50 லட்சத்துக்கும் கூட அவர் திட்டங்களை கொடுப்பார்.

    வங்காள மொழியில் வணக்கம் சொன்ன ஸ்டாலின் மத்திய பிரதேசத்தில் கூட்டம் நடந்தால் இந்தியில் பேசுவாரா? மாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறுகிறார்.

    அடைந்தால் திராவிட நாடு என்று வீரவசனம் பேசி ஆட்சி சுகம் கண்டது தி.மு.க. கொல்கத்தா கூட்டத்தில் 2-ம் சுதந்திர போராட்டம்! தேசியம்! என்றெல்லாம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது புல்லரிக்கும் நடிப்பு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #TamilisaiSoundararajan #BJP

    மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாளை விக்கிரமராஜா தலைமையில் கருப்பு சட்டை அணிந்து மண்டலம் தோறும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
    சென்னை:

    சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை திருத்தக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் சார்பில் நாளை இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் கடை அடைப்புக்கு பதிலாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து மண்டலம் தோறும் நாளை வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்குகிறார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகிக்கிறார்.

    இதில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விளக்கவுரை நிகழ்த்துகிறார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா வி.பி.மணி, ராஜ்குமார், எட்வர்டு, நடராஜன், மகேஸ்வரன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் மற்றும் எஸ்.சாமுவேல் உள்ளிட்ட மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.

    வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இதன் அடுத்தகட்ட போராட்டமாக உண்ணாவிரத போராட்டம், சட்டமன்ற முற்றுகை போராட்டம், தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிவித்துள்ளார்.
    ×