search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில"

    • கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாமக்கல்:

    கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாகன சோதனை

    நாமக்கல் எம்.மேட்டுப்பட்டி, நல்லிபா ளையம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் டி.எஸ்.பி தன்ராஜ் அறிவுறுத்தலின்படி போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்ட னர்.

    அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புகைப்படத்தை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனை சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிரா மூலமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் டி.எஸ்.பி. தன்ராஜ் கூறுகையில், வடமாநில கொள்ளையர்களை கண்காணிக்க சோதனை சாவடியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்து வாகனங்கள் மூலமும் தீவிர கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • பெருந்துறையில் வடமாநில வாலிபருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் சுபமபூர் பகுதியை சேர்ந்தவர் அண்டயாமி சாகு (21). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் வேலைக்காக வந்தார்.

    அங்கு உறவினர் தங்கியிருந்த அறையில் தங்கி வேலை தேடி வந்தார். இந்நிலையில் அண்டயாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் அவரை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என நகராட்சி தலைவர் தகவல் தெரிவித்தார்.
    கீழக்கரை

    ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் இருந்து பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக தங்கியிருக்கும் வடமாநில இளைஞர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், கட்டிட என்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஐஸ் தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர் வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைபேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவன உரிமையாளரின் ஆதார் எண், மொபைல் எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகிய விபரங்களை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வருகிற 
    15-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். 

    தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×