search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Indian"

    • நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சோதனை செய்தனர்.
    • 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுப்படி திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும்கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

    அந்த வழியாக வந்த மொபட்டை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 450 கிலோ பதுக்கி வைத்துஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் செல்லம் நகரைசேர்ந்த அன்புமணி (வயது 23) என்பதும் இவர் நொச்சிபாளையம், வீரபாண்டி பகுதிகளில்உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை பதுக்கி வைத்துவட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்புமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர்.

    • இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கோவை - பரூனி சிறப்பு ரெயில் கூடுதலாக 7 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பிலாஸ்பூர் - எர்ணாகுளம் ரெயில் கோவை செல்லாது. இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு - கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணி நடக்கிறது.இதனால், வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் ரெயில், திருப்பூரில் இருந்து இருகூர் - போத்த னூர் வழியாக பாலக்காடு சென்றடையும். கோவை ரெயில் நிலையம் செல்லா து. அதே நேரம் போத்தனூரில் ரெயில் நிற்கும்.திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் ஏப்ரல், 3, 4, 7, 8 மற்றும் 9-ந் தேதி ஆகிய 6 நாட்கள் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும். மேற்கண்ட 6 நாட்கள் கோவை - மேட்டுப்பா ளையம் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்த கவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    கோவை - பரூனி சிறப்பு ரெயில் கூடுதலாக, 7 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அட்டவணை யிலும் திருப்பூர் புறக்கணிக்க ப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் அம்மாநி லத்தவர் வசதிக்காக, மார்ச் 6-ந் தேதி கோவை - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இரண்டாவது சிறப்பு ெரயில் கோவை - பரூனி (பீகார்) இடையே ஏப்ரல், 5, 12, 19, 26 மற்றும் மே, 3ல் புதன்தோறும் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் புறப்படும் இந்த ரெயில் திருப்பூரில் நிற்காமல் ஈரோடு செல்லும் என அட்டவணை வெளி யானது. குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் ெரயில் நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தினர்.அதை ஏற்று, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பழைய அட்டவணையில் ரெயில் நின்று செல்லும் நிறுத்தங்கள் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. தற்போது கூடுதலாக 7 நிலையங்கள் சேர்த்து, 39 ஆக அதிகரித்து ள்ளது. இதில் 3ஆந்திர மாநிலத்திலும், 4 ஒடிசா மாநிலத்திலும் வருகிறது.

    தமிழகத்தில் ெரயில் நிற்கும் நிலையங்கள் எண்ணிக்கை ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் என்ற பழைய பட்டியல் அப்படியே தொடர்கிறது. புதிய அட்டவணையிலும் திருப்பூர் சேர்க்க ப்பட வில்லை. இதனால் திருப்பூ ரை சேர்ந்த வடமாநிலத்தினர் ஈரோடு, கோவை சென்று ரெயிலில் ஏறும் நிலை உள்ளது. எனவே திருப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

    • தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
    • ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    பல்லடம் :

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல் (வயது 35). இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.40,000 பணம், வெள்ளி பிரேஸ்லெட், உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லா சர்தார்(35)என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் நான்கு நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
    • தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    திருச்சி:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இன்று திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை மிக சுகாதாரத்தோடும், போதிய அளவு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது.

    தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல் மருத்துவ பிரிவு மிக சிறப்பாக செயல்படுவதோடு தினமும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் மகப்பேறு மருத்துவத்தை பொருத்தவரை மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

    நான் ஆய்வு மேற்கொண்ட போது சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை மாலை நேரங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது. எனவே இங்குள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்படும்.

    அதேபோல் ஐ.சி.யூ. என்று சொல்லக்கூடிய தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் ஒரு வார காலத்திற்குள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் உறுதுணையோடு அந்த தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆய்வு குழு சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில் நேரடியாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அங்குள்ள தொழிலாளர்கள் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் இயக்குனர் ராஜமூர்த்தி மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தவுபிக் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் தவுபிக்(வயது 37). இவர் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் உள்ள, தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்குச் செல்வதற்காக மில்லில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் தர மறுக்கவே அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள செல்போன், ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து காயத்துடன் தொழிற்சாலைக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். பின்னர் இது பற்றி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
    • வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ரேசன் கடை வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (46) இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1/4 பவுன் தங்க கம்மல் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆலாங்கிர் மகன் முகமது (சுபியர்27) என்பவரை ஆறுமுகம் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 12 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார்.
    • சிறுமியை அமர வைத்துவிட்டு, அருகே உள்ள கடைக்குச் சென்று வருவதாக தந்தை சென்றுள்ளார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 12 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு தந்தையுடன் சிறுமி சென்றுள்ளார். மருத்து வமனையில் சிறுமியை அமர வைத்துவிட்டு, அருகே உள்ள கடைக்குச் சென்று வருவதாக தந்தை சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி அழுது கொண்டே மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார். இதனைப் பார்த்த தந்தை வந்து விசாரித்த போது, மருத்துவமனையில் சிறுமி அருகே உட்கார்ந்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினாள்.

    இதையடுத்து அவர் மருத்துவமனைக்குள் சென்று பார்த்தபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதை அடுத்து சிறுமியின் தந்தை பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மதன் பிரசாத் மகன் மகேஷ் பிரசாத், (44) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
    • டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் நால்ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூபாதர் தாஸ் மகன் சக்தி தாஸ்(28) என்பதும் வெள்ளகோயில் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. கோடங்கிபாளையத்தில் வசிக்கும் தனது சித்தப்பா ஜெகபந்து தாஸை பார்க்க வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சித்தப்பா ஜெகபந்து தாஸ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன.
    • 2வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர்.

    பல்லடம் :

    திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சனுப் என்பவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, லட்சுமி நகர் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 27ந்தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றவர் மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள சேடபாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைகளை தூக்கிக்கொண்டு வந்த 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் லட்சுமி நகர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் சகானி மகன் சுதிர் குமார் (22) மற்றும் சங்கர் தாகூர் மகன் சஞ்சித் தாகூர் (32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 34 ஸ்மார்ட் செல் போன்கள், 31 சாதா செல்போன்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.
    • வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன்றனர். இங்கு வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தில் இருந்து வந்து வெள்ளகோவில் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் மில் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.

    இந்நிலையில் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்காலிகமாக வெள்ளகோவில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4ம் வாரமாக நேற்று வாரச்சந்தை செயல்பட்டது. இதில் வழக்கம்போல் விவசாயிகள், பொதுமக்கள் ,வியாபாரிகள் வந்திருந்தனர். வட மாநில மில் தொழிலாளர்கள் பொதுமக்கள் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    • வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை.
    • வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேகாமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது37).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் இவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். இந்தநிலையில் கோவிலுக்குச் சென்ற சம்பத்குமாரை அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்குள் யாரோ வந்தது போலவும், சமையலறைக்குள் இருந்து யாரு என கேட்டதாகவும், பதில் வராததால் வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

    போலீசார்விசாரணையில் சம்பத் குமாரின் வீட்டிற்கு சென்று திருட முயன்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பஸ்வான் (30,) பந்தேப் பக்டி(32) பாபன் புயனா(21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை.
    • 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி செங்கோடம்பாளையம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் மூட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த பரமான்மாலிக் மகன் நீலு குமார் மாலிக் (35) என்பதும் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரையின் பேரில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நீலு குமார் மாலிக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    ×