search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UNDER GUNDAS ACT"

    • ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை.
    • 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி செங்கோடம்பாளையம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் மூட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த பரமான்மாலிக் மகன் நீலு குமார் மாலிக் (35) என்பதும் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரையின் பேரில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நீலு குமார் மாலிக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    ×