என் மலர்

    நீங்கள் தேடியது "mysterious death"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)குழந்தை எதுவும் இல்லை .
    • 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் காலணிடேங்க்தெருவைசேர்ந்தவர்அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை எதுவும் இல்லை . 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார். அவரது உடலை பனப்பாக்கத்திற்கு அழகுவேல் கொண்டு வந்தார்.

    இதற்கிடையில் இறந்து போன தமிழ் செல்வி உறவினர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .அவர்களிடம் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம்போலீசார் ெதாடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது.
    • மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு மனைவி பவுன் (வயது 50) கூலி தொழிலாளி, இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 27- ந் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது. 

    அதன்படி கடந்த 2- ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் பவுனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கழிவறை செல்வதற்காக எழுந்து சென்றவர் மயக்கம் வருவதாக கூறி மீண்டும் வந்து படுக்கையில் படுத்துள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவரது உறவினர்கள் பவுன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது உடற்கூறு ஆய்வு முடிவு தெரிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறி உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை ஏற்று உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து செல்வராசு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக வந்த பெண் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23) இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
    • அரசூர் பாரதி நகர் அருகே உள்ள யோகா ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23) இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 28-ந்தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் பாரதி நகர் அருகே உள்ள யோகா ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் செல்லதுரையின் செல்போனுக்கு கடைசியாக. பேசியது திருநாவலூர் அருகே உள்ள கோபாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மனைவி ஷர்மிளா (23) என தெரிய வந்தது. ஷர்மிளாவிற்கு திருமணம் ஆவதற்கு முன்பு செல்லதுரை காதலித்து வந்துள்ளார். அப்போது ஷர்மிளாவை ஆபாசமாக விடியோ எடுத்த செல்லதுரை, அதை வைத்து மிரட்டி ஷர்மிளாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் செல்லதுரையின் தொல்லை தாங்காமல் தனது கணவர் வீடான கோபாலகிருஷ்ணபுரம் சென்று விட்டார்.  சம்பவத்தன்று சர்மிளா வீட்டிற்கு சென்ற செல்லதுரை, அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

    இதில் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திர மடைந்த ஷர்மிளா, தான் தூக்கு போட்டுக்கொண்டு சாகப்போவதாக அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். இதில் பயந்து போன செல்லதுரை பக்கத்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து புடவையை அறுத்துள்ளார். இதில் கீழே விழுந்த செல்லதுரையின் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஷர்மிளா தனது நண்பர்கள் 3 பேரிடம் என்ன செய்வது என்று கேட்டுள்ளார். சென்னையிலிருந்து வந்த 3 ஆண் நண்பர்களும், செல்லதுரையின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து அரசூர் அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் போட்டு விட்டு சென்றனர்   இதையடுத்து செல்லதுரை இறந்ததை போலீசாரிடம் சொல்லாமல் மறைத்தது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஷர்மிளாவை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரம் அருகே உள்ள கீழ் முத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரத் (22), ராஜ்குமார் (22), சென்னையைச் சேர்ந்த ஆனந்த் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாள தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றின் கரையில் உள்ள குட்டையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வாணியம்பாடி தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு சென்று, தீயணைப்பு துறையினர் உதவியுடன் தண்ணீரில் மிதந்த ஆண் உடலை மீட்டு கொண்டு வந்தனர்.

    வாலிபரின் முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து இருந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அதனை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    வாலிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி நகரத்தை ஒட்டியுள்ள உதயேந்திரம், மேட்டுப்பாளையம், சி.வி.பட்டறை மற்றும் அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    மணல் கொள்ளை நடத்தும் மாபியா கும்பலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவாய்த்துறையினரை தாக்கியும், மணல் கடத்தல் தொடர்பாக தகவல் அளிப்பவர்கள் தாக்கப்பட்டு வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் களும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் மணல் கொள்ளையர்கள் பல்வேறு கோஷ்டிகளாக உள்ளதால், அவர்களுக்கிடையே ஏற்படும் தகராறு தொடர்பாக போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டு அதன் மீது விசாரணை நடத்தும் போலீசார் வேறு வழக்குகளை பதிவு செய்து முடித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதால், இது இருதரப்புகளுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாத்தூர் அருகே பட்டாசு வேலைக்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்புலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபாண்டி (வயது 33).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார்.

    அப்போது எந்திரத்தில் சிக்கிய விபத்தில் இவரது கை ஊனமானது. அதே மில்லில் வேலை பார்த்த விஜய் என்பவரை திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி விஜய் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜபாண்டி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிந்தப்புலியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இங்கிருந்து அவர் வெற்றிலையூரணியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ராஜ பாண்டி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென் றார். ஆனால் அவர் பட்டாசு ஆலைக்கு செல்லவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜபாண்டியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். இந்த நிலையில் சிந்தப்புலி -மேட்டமலை இடையே உள்ள உப்போடையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ராஜபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது 2 கால்களும் மடங்கிய நிலையில் இருந்தன. சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் சம்பவஇடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்த வர் தனலட்சுமி. இவரது மகள் அருகே சுகந்தி. இவர் ஆற்காடு தாஜ்புரா கூட்ரோட்டில் கணவர் பாலாஜியுடன் வசித்து வந்தார். பாலாஜி செங்கல் பட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சுகந்தி ஆற்காடு தனியார் பள்ளியில் ஆசிரியையாகவேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    பாலாஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் சுகந்தியை அடிக்கடி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 4-ந் தேதி சுகந்தியை அவரது தாய் தனலட்சுமி, மருமகன் பாலாஜியிடம் சொல்லிவிட்டு மழையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மழையூரில் இருந்து சுகந்தி வேலைக்கு சென்றுள்ளார்.

    கடந்த 11-ந்தேதி பள்ளியில் ஆண்டு விழா நடப்பதாக சுகந்தி கூறிவிட்டு சென்றுள்ளார். இரவில் ஊருக்கு வர பஸ் இல்லாததால் மற்றொரு பஸ்சில்வந்து கணியனூரில் இறங்கி உள்ளார்.

    அவரை ஏழுமலை என்பவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் சாப்பிட்டுவிட்டு குழந் தையுடன் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் சுகந்தி மயங்கிய நிலையில் இருந்தார்.

    அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து சுகந்தியின் தாய் தனலட்சுமி கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிர்வாக நலன் கருதி நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 9 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

    பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தாசில்தாராகவும் (பறக்கும்படை), அங்கு பணிபுரிந்த கோட்டீஸ்வரன் வேலூர் உதவிகமிஷனர் (கலால்) அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த செல்வி வேலூர் கோவில் நிலங்கள் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்குமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சுமதி கே.வி.குப்பம் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரமேஷ் முத்திரைக்கட்டண தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சத்தியமூர்த்தி வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நரசிம்மன் வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராகவும், வேலூர் தாலுகா தேர்தல்பிரிவு துணை தாசில்தார் சிவசண்முகம் பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும் இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்.

    பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்று கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு மாணிக்கம் விநாயகர் கோவில் தெருவில் இன்று அதிகாலை வடமாநில வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வட மாநில வாலிபர் யார்? எதற்காக காட்பாடி வந்திருந்தார் என்பது தெரியவில்லை. அவர் யார்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து கிடந்த வட மாநில வாலிபர் நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் அங்குள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும் அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மறுவாழ்வு இல்லம் அருகே பிணம் மீட்பு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள மல்லவாடி சொரந்தை மறுவாழ்வு இல்லம் அருகில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடப்பதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பிணமாக கிடந்த முதியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரிகா (வயது 19) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

    இந்த நிலையில் திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சந்திரிகா சென்றார். அங்கு சந்திரிகா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு கிராமத்தில் இறந்து கிடந்தார்.

    சந்திரிகா இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சந்திரிகா இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விரைந்து வந்த போலீசார் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரிகா இறந்த தகவல் அறிந்த 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சந்திரிகாவின் உறவினர்களை சூழ்ந்து முற்றுகையிட்டனர்.

    சந்திரிகாவின் சாவிற்கு நீங்கள் தான் காரணம் உங்கள் வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார் என சரமாரியாக கேள்வி கேட்டு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குரிசிலாப்பட்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓச்சேரி அருகே நடந்தது
    • கொலையா? விசாரணை

    நெமிலி:

    நெமிலி அடுத்த ஒச்சேரியில் உள்ள மக்லின் கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று மிதந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்கு அடைந்தனர். பின்னர் ஒச்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மிதந்து கிடந்த பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதிய தெரு பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து இங்கு வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.