search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கை மர்ம சாவு
    X

    திருநங்கை மர்ம சாவு

    • அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரிகா (வயது 19) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

    இந்த நிலையில் திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சந்திரிகா சென்றார். அங்கு சந்திரிகா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு கிராமத்தில் இறந்து கிடந்தார்.

    சந்திரிகா இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சந்திரிகா இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விரைந்து வந்த போலீசார் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரிகா இறந்த தகவல் அறிந்த 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சந்திரிகாவின் உறவினர்களை சூழ்ந்து முற்றுகையிட்டனர்.

    சந்திரிகாவின் சாவிற்கு நீங்கள் தான் காரணம் உங்கள் வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார் என சரமாரியாக கேள்வி கேட்டு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குரிசிலாப்பட்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×