search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhihar Train"

    • இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கோவை - பரூனி சிறப்பு ரெயில் கூடுதலாக 7 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பிலாஸ்பூர் - எர்ணாகுளம் ரெயில் கோவை செல்லாது. இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு - கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணி நடக்கிறது.இதனால், வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் ரெயில், திருப்பூரில் இருந்து இருகூர் - போத்த னூர் வழியாக பாலக்காடு சென்றடையும். கோவை ரெயில் நிலையம் செல்லா து. அதே நேரம் போத்தனூரில் ரெயில் நிற்கும்.திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் ஏப்ரல், 3, 4, 7, 8 மற்றும் 9-ந் தேதி ஆகிய 6 நாட்கள் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும். மேற்கண்ட 6 நாட்கள் கோவை - மேட்டுப்பா ளையம் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்த கவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    கோவை - பரூனி சிறப்பு ரெயில் கூடுதலாக, 7 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அட்டவணை யிலும் திருப்பூர் புறக்கணிக்க ப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் அம்மாநி லத்தவர் வசதிக்காக, மார்ச் 6-ந் தேதி கோவை - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இரண்டாவது சிறப்பு ெரயில் கோவை - பரூனி (பீகார்) இடையே ஏப்ரல், 5, 12, 19, 26 மற்றும் மே, 3ல் புதன்தோறும் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் புறப்படும் இந்த ரெயில் திருப்பூரில் நிற்காமல் ஈரோடு செல்லும் என அட்டவணை வெளி யானது. குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் ெரயில் நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தினர்.அதை ஏற்று, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பழைய அட்டவணையில் ரெயில் நின்று செல்லும் நிறுத்தங்கள் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. தற்போது கூடுதலாக 7 நிலையங்கள் சேர்த்து, 39 ஆக அதிகரித்து ள்ளது. இதில் 3ஆந்திர மாநிலத்திலும், 4 ஒடிசா மாநிலத்திலும் வருகிறது.

    தமிழகத்தில் ெரயில் நிற்கும் நிலையங்கள் எண்ணிக்கை ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் என்ற பழைய பட்டியல் அப்படியே தொடர்கிறது. புதிய அட்டவணையிலும் திருப்பூர் சேர்க்க ப்பட வில்லை. இதனால் திருப்பூ ரை சேர்ந்த வடமாநிலத்தினர் ஈரோடு, கோவை சென்று ரெயிலில் ஏறும் நிலை உள்ளது. எனவே திருப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

    ×