search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle collision"

    • நாகராஜ் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குள் ஓலக்கூர் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் இறந்து கிடந்த நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி வாலிபர்-தொழிலாளி பலியாகினர்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே உள்ள டி.கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது46), விறகு வெட்டும் தொழிலாளி. இவர் மகளை பார்ப்பதற்காக நரிக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மணிக்கட்டியேந்தல் பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஷேர்ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முத்துபாண்டி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஷேர்ஆட்டோ டிரைவர் பரமக்குடி பிடாரிசேரியை சேர்ந்த பெரிய சாமி (43) மீது வழக்குப்பதிவு செய்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள புளியம்பட்டி மகாராஜாபுரத்தை சேர்ந்த வர் கிருஷ்ண பிரசாத் (வயது34). மதுரை-தூத்துக்குடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொகண்டிருந்தார். கள்குறிச்சி பகுதியில் ஓட்டல் ஒன்றின் அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த டிப்பர் லாரி திடீரென திரும்பி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்து கிருஷ்ண பிரசாத் படுகாயம் அடைந்தார். அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து கிருஷ்ண பிரசாத்தின் சகோ தரர் பாபு கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கி ணறு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் அருகே சுமார் 45 வயது மதிக்க தக்க நபர் இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை போலீஸ் சரகம் கணபதி பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 45 வயது மதிக்க தக்க நபர் இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் ராமசாமி என மருத்துவமனை பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். இதில் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

    ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    • சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று திருவண்ணாமல செல்லும் ரோட்டில் படவேடு கூட்ரோடில் சைக்கிளில் சென்றார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சந்தவாசல் போலீசில், முருகன் மனைவி வள்ளி (31) புகார் செய்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வட மாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    பீகார் மாநிலம் நபிகஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ்வர் (வயது 55). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி பால்னங்குப்பம் கூட்டு ரோடு அருகே இன்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்றார்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவம் இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம்- சேலம் மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 65), இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் அங்குசெட்டி பாளையம் சிற்றரசு அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் அடிபட்டு கிடந்தார்.அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காட்ேராடு அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் நடந்து சென்ற போது வாகனம் மோதியது.
    • சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி காட்ேராடு அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த

    அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புது தெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரி. நேற்று மாலை இவரது மகன் முகமதுஅஸ்லம்(6), மகள் அப்சரா பானு(4) இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீது மோதி சென்றது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் முகமது அஸ்லாமுக்கு காது, மூக்கு உட்பட பகுதிகளில் ரத்தக்கசிவு இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு,

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கபிலன் (30). இவர் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோவை செல்வதற்காக அவரது நண்பர் சத்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் மற்றும் அவரது நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான கபிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் இவர் வாகனத்தின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகை கடை ஊழியர் பலியானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாம்பூரை சேர்ந்தவர் முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் நேற்று இரவு 9.45 மணிக்கு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சா லையில் சென்று கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.    இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடைபெற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பெருந்துறை:

    திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 45). லாரி டிரைவர்.

    இவர் சம்பவத்தன்று திருப்பூர் பகுதியில் லோடு இறக்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக லாரியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சாப்பிடுவதற்காக லாரியை பெருந்துறை சரளை அருகே ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு ரோட்டை கடந்து மறுபுறம் ஓட்டலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் முத்துவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
    • இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் ரோடு பகுதியில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை அந்த மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×