search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman killed"

    • மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியது.
    • மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

    நத்தம்:

    நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம், மேலூர், சிங்கம்புணரி, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் காய்கறி கடைகள் நடத்துவதற்கு வருகின்றனர்.

    இன்று காலை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டி மங்கலத்தைச் சேர்ந்த நாச்சான் மனைவி பேச்சி (வயது 60) என்பவர் வழக்கம் போல் காய்கறி கடை நடத்துவதற்காக சாலை ஓரத்தில் காய்கறி மூடைகளை அடுக்கி கடை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த இடத்தில் தாழ்வாக செல்லும் பழைய மின் வழி தடத்தை மாற்றி உயரமான அளவில் மின்கம்பம் ஊன்ற ப்பட்டது. அதில் மின் இணைப்பு கொடுக்காமல் மின் கம்பியை சுருட்டி கம்பத்தின் கீழ் தரையில் வைத்திருந்தனர். மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மின்சார வாரிய அலட்சி யத்தால் பெண் இன்றும் 3 பசுமாடுகள் இதற்கு முன்பும் உயிரி ழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

    தொடர் சம்பவ ங்களால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். இதற்கு தீர்வு காண வே ண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் பேச்சியின் உடலை பிரேத பரிசோ தனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி.
    • ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி (வயது 45).இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களும் நேற்று வழக்கம்போல் மண்ட வாய் புதுகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்றனர். இவர்கள் வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினர்.

    இவர்கள் வந்த ஷேர் ஆட்டோவை பொன்னுசாமி ஓட்டி வந்தார். இந்த ஷேர் ஆட்டோ மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மண்ட வாய் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து புதுவைக்கு சென்ற கார், ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ராசாத்தி, நாகம்மாள் ,கலைச்செல்வி ,வசந்தி, பிரபாவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி நேற்றிரவு இறந்துவிட்டார். மற்ற 4பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனா சமைத்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பா ராத விதமாக இவரது நைட்டியில் தீ பிடித்தது.
    • மீனா மீது பரவிய தீயை போராடி அணைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கள்ளிக் காட்டு தெருவை சேர்ந்தவர் மீனா (வயது 31). இவர் கடந்த 22-ந்தேதி வீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பா ராத விதமாக இவரது நைட்டியில் தீ பிடித்தது. உடனே வீட்டை விட்டு வெளியில் வர முயன்றார். ஆனால் இவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவியது. 

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மீனா மீது பரவிய தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது.

    விழுப்புரம்:

    மயிலம் கீழ்எடையாலம் பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மனைவி செல்வமணி (வயது 50) பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பெரியதம்பி தனது மோட்டார் சைக்கிளில் மனைவி செல்வமணியுடன் கீழ்எடையாலம் பகுதியில் இருந்து கூட்டேரிபட்டிற்கு கடைக்கு தேவையான பல சரக்கு வாங்குவதற்கு சென்றனர். 

    இதனை யடுத்து பலசரக்கு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கூட்டேரிபட்டி லிருந்து கீழ்எடையாலத்திற்கு வந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் வந்த போது பின்னால் வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கி ளிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெரியதம்பி, இவரது மனைவி செல்வமணியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 108 ஆம்புலன்சில் செல்லும் வழியிலே செல்வமணி பரிதாப மாக உயிர் இழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பெரிய தம்பிக்கு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த செல்வமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.
    • மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் ஓட்டேரி சேர்ந்தவர் மதன் (வயது 36). இவரது மனைவி வீரலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் ஓட்டேரி பகுதியில் உள்ள மாட்டு பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர். இன்று காலை வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சாயல்குடி அருகே மின்கம்பத்தில் மோதி பெண் பலியானார்.
    • இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது35). இவர் குளிப்பதற்காக துணிகளை வட்டையில் எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அவருக்கு பின்னால் குடிநீர் கொண்டு சென்ற டிராக்டரின் டேங்கர் கலைச்செல்வி துணி கொண்டு சென்ற வட்டையில் உரசியதில் தடுமாறி எதிரில் இருந்த மின்கம்பத்தில் மோதினார்.

    இதில் படுகாயமடைந்த கலைச்செல்வியை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ). குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவீட்டிற்கு திரும்பிய போதுடிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து.
    • இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி கூட்ரோடு விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ).இவர்களின் உறவினர்கள் வினோதினி (34), நாராயணன் (52) காரை ஓட்டிய விக்னேஷ் (30) ஆகியோர் காரில் கடலூர் மாவட்டம் நந்தி மங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது விருத்தாசலம் வி. கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெல்டன் தனியார் பள்ளி அருகே சென்றபோது முன்னாள் சென்ற கரும்பு டிராக்டரை கார் முந்தி சென்றுள்ளது. அப்பொழுது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 4 பேர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இறந்த கோமதியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 4 பேரும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார்.
    • மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவர்இவரதுநிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிர்களை காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலத்தில்மணிலா அறுவடை பணிக்காக மணம்தவழ்ந்த புத்தூர்காலனியை சேர்ந்த சேட்டுமனைவி தனலட்சுமி (வயது 65) வந்தார்.அவர் அங்கிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டுசபியுல்லா,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விவசாயி சுப்புராயனை கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர்.
    • தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காபலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார்.


    கடலூர்.:

    கடலூர் முதுநகர் செல்லாங்குப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் கடந்த 9-ந்தேதி பலியாகினர். தற்கொலைக்கு முயன்ற தங்கையின் கணவரை தடுக்க சென்ற தமிழரசி, அவரது 4 மாத மகள் ஹாசினி, தனலட்சுமியின் 4 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்து போனர்.

    மேலும், இதில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மனைவியான சற்குரு, தனலட்சுமி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் இறந்து போன தமிழரசி, தனலட்சுமியின் தாயார் செல்வி (50) மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 பேராக உயர்ந்துள்ளது. தாய், 2 மகள்கள், ஒரு மருமகன், 2 குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 6 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார்.
    • அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாபமாக இறந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் தோமஸ் (வயது57). இவரது மனைவி மேரி பாக்கியமணி (53). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இதற்காக வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் வைக்கோல் படப்பு வைத்து ள்ளனர். சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது.

    இதனைதொடர்ந்து அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாப மாக இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி பரிதா பானு (வயது 47). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் பரிதா பானு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை அவரது உறவினர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிதா பானுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • அரசு பஸ் மோதி பெண் பலியானார்.
    • திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்சு மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×