search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government bus collision"

    • அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.
    • ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்பவர் ராஜா என்கிற ரங்கசாமி (41). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரங்கசாமி வேலை முடித்து விட்டு சொந்த வேலை காரணமாக நம்பியூர் மேடை அருகே ரோட்டின் வலது பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி சம்பவ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது31), கட்டிடத் ெதாழி லாளி. இவரது மனைவி மஞ்சுளா(21). இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடித்துவிட்டு மஞ்சுளா கணவரை அழைத்து செல்ல வருமாறு கூறியுள்ளார். அதன்படி ஜெயராஜ் மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு புறப்பட்டார்.

    சாத்தூரில் உள்ள மதுரை பஸ் நிறுத்தத்தில் மஞ்சுளா கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் ஜெயராஜ் மனைவி அருகில் வரும்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மஞ்சுளா கண்ணெதிரே விபத்தில் கணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செக்கானூரணியில் அரசு பஸ் மோதியதில் பூ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
    • செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகில் ஏ.கொக்குளம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(வயது40) பூ வியாபாரி.

    இவர் இன்று காலை செக்கானூரணியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் சவுந்தர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சவுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது.
    • லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஏ.புதூரை சேர்ந்த சிவசங்கர் ஓட்டினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இந்த பஸ் பண்ருட்டி அருகே கண்டரக்ேகாட்டை தென்பெண்ணை ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது. இதனால் பயணிகள் கூச்சல்போட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு பஸ் மோதி பெண் பலியானார்.
    • திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்சு மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×