search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
    X

    அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

    • அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது31), கட்டிடத் ெதாழி லாளி. இவரது மனைவி மஞ்சுளா(21). இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடித்துவிட்டு மஞ்சுளா கணவரை அழைத்து செல்ல வருமாறு கூறியுள்ளார். அதன்படி ஜெயராஜ் மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு புறப்பட்டார்.

    சாத்தூரில் உள்ள மதுரை பஸ் நிறுத்தத்தில் மஞ்சுளா கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் ஜெயராஜ் மனைவி அருகில் வரும்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மஞ்சுளா கண்ணெதிரே விபத்தில் கணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×