search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே இன்று காலை விபத்து: லாரி மீது அரசு பஸ் மோதல்; பயணிகள் 10 பேர் காயம்
    X

    பண்ருட்டி அருகே இன்று காலை விபத்து: லாரி மீது அரசு பஸ் மோதல்; பயணிகள் 10 பேர் காயம்

    • அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது.
    • லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஏ.புதூரை சேர்ந்த சிவசங்கர் ஓட்டினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இந்த பஸ் பண்ருட்டி அருகே கண்டரக்ேகாட்டை தென்பெண்ணை ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது. இதனால் பயணிகள் கூச்சல்போட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×