search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே பாம்பு கடித்து பெண் பலி
    X

    களக்காடு அருகே பாம்பு கடித்து பெண் பலி

    • சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார்.
    • அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாபமாக இறந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் தோமஸ் (வயது57). இவரது மனைவி மேரி பாக்கியமணி (53). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இதற்காக வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் வைக்கோல் படப்பு வைத்து ள்ளனர். சம்பவத்தன்று மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது.

    இதனைதொடர்ந்து அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பாக்கியமணி பரிதாப மாக இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×