search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன விபத்தில் பெண் என்ஜினீயர் பலி
    X

    வாகன விபத்தில் பெண் என்ஜினீயர் பலி

    • வாகன விபத்தில் பெண் என்ஜினீயர் பலியானார்.
    • பணிக்கு சென்ற போது நடந்த சம்பவம்

    திருச்சி:

    திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனி, 15-வது தெருவில் வசித்து வருபவர் குமாரமங்கலம் மகள் காயத்ரி (வயது25) இவர் பி.இ. பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் பணி செய்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றார். ஆர்டிஓ ஆபீஸ் அருகே சென்ற பொழுது அவ்வழியே சென்ற மற்றொரு டூவீலர் வாகனம் மற்றும் ஐடி பார்க் கம்பெனி ஊழியர்கள் பணிக்கு செல்லும் பஸ் சென்றுள்ளது. இந்த இரண்டு வாகனங்களில் எந்த வாகனம் இவர் மீது மோதியது என்று தெரியவில்லை.

    அப்போது நிலை தடுமாறி காயத்திரி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டூஇதனை பார்த்த பஸ்ஸில் பயணித்த சக ஊழியர்கள் உடனடியாக இவரை மீட்டு நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×