search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அருகே நடந்து சென்ற பெண் வாகனம் மோதி பலி
    X

    மேல்மலையனூர் அருகே நடந்து சென்ற பெண் வாகனம் மோதி பலி

    • தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
    • அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி வண்ணபூபால். இவர் அவலூர்பேட்டையிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×