search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee death"

    • செல்வம் (50), இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • இந்த நிலையில் நே ற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கந்தம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50), இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நே ற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கந்தம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பட்டர் பிளை மேம்பாலம் முகப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

    தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாரிராஜ் நேற்று இரவு வேலையை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • அண்ணா நகர் மெயின் ரோடு 4-வது தெரு அருகே சென்றபோது களியக்காவிளையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற ஆம்னி பஸ் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் மாரிராஜ். (வயது 45). இவர் தனியார் ஆம்னி பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு வேலையை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் மெயின் ரோடு 4-வது தெரு அருகே சென்றபோது களியக்காவிளையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற ஆம்னி பஸ் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாரிராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று மாரிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவரான நாகர்கோவிலை சேர்ந்த நம்பிராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலியன் ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார்.
    • கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் குருபீடபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 45). இவர் எலவனசூர்கோட்டை அருகே கொட்டயூர் பகுதியில் உள்ள ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது. இதில் அலறி கீழே விழுந்தார். இதனை பார்த்த சக பணியாளர்கள் கலியனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலியன் இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கலியனின் உறவினர்கள் கொட்டயூர் பகுதியில் உள்ள கல்குவாரி கம்பெனி முன்பு திரண்டனர். இறந்த கலியனிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதனால் கலியன் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எலவனசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், தனிப்பிரிவு ேபாலீசார் சுரேஷ் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட கலியன் உறவினர்களிடம் இறந்த கலியன் குடும்பத்திற்கு உரிய முறையில் இழப்பீட்டு தொகை வாங்கி தரப்படும் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை முன்னிட்டு கம்பெனியின் ஒப்பந்ததாரர் இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் கலியன் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகையிட்ட கலியன் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் இவர் வாகனத்தின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகை கடை ஊழியர் பலியானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாம்பூரை சேர்ந்தவர் முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் நேற்று இரவு 9.45 மணிக்கு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சா லையில் சென்று கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.    இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடைபெற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார்.

    புதுச்சேரி:

    திண்டிவனம் வட்டம் பேரணி கிராமத்தை சேர்ந்த வர் காத்தவராயன் மகன் ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இவர் தினந்தோறும் பேரணியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூல மாக வேலைக்கு சென்று விட்டு திரும்பி பேரணி கிரா மத்துக்கு செல்வார். நேற்று இரவு வேலை முடிந்து விட்டு வழுதா வூரில் நடைபெற்ற தனது நண்பர் விசேஷத்தில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் மூலமாக பேரணி நோக்கி சென்று கொண்டி ருந்தார்,

    விக்கிரவாண்டி போலீஸ் கோட்டர்ஸ் அருகே செல்லும் பொழுது முன்னாள் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் சென்றவர் திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பழுத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.புகார் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ஜெயபாலுக்கு சாந்தி என்ற மனைவியும் சக்தி என்ற மகளும் உள்ளனர்.

    • ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்
    • போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருேக காரைக்காடு சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28-ந் தேதி வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஏழுமலை திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஏழுமலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை இறந்த ஏழுமலை உடலை ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி முன்பு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் உடலுடன் உறவினர்கள் கடலூர் - சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் புகார் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கம்பி அறுந்து நிலத்தில் விழுந்து கிடந்தது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த காம்பட்டை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52). இவர் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று சக்கரவர்த்தி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து நிலத்தின் வரப்பில் விழுந்து கிடந்தது. அதனை சக்கரவர்த்தி மிதித்துள்ளார்.

    இதில் அவரை தூக்கி வீசியது இதில் படுகாயம் ஏற்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து சக்கரவர்த்தியின் உடலை பிரேத பரி சோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவ மனை அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- டாஸ்மாக் கடை ஊழியர் விபத்தில் பலியானார்.
    • வேலு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 26).இவர் பகண்டை கூட்டு ரோடு இளையனார்குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்து வேலு மோட்டார் சைக்கிளில் அத்தியூர் நோக்கி சென்றார். அத்தியூர் பால ஓடைபகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ேமாதியது. இந்த விபத்தில் வேலு படுகாயம் அைடந்தார்.

    தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சையது பாஷா, சோலை ஆகியோர் வேலுவை மீடடு சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வேலு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார்.

    விபத்து குறித்து பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, பாபு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    வள்ளியூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள கேதைசேரியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது42), தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (35). சம்பவத்தன்று முத்து கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வள்ளியூரில் இருந்து கோதைசேரிக்கு சென்ற போது ஒரு திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் சறுக்கி கவிழ்ந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த முத்துகிருஷ்ணனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கப்பலூர் தொழிற்பேட் டையில் தொழிலாளி மர்மமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் (வயது 56). இவர் திருமங்கலம் தொழிற்பேட்டையில் உள்ள மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு பணியில் இருந்த வீரணன் தொழிற்சாலை வளாகத்துக்குள் இறந்து கிடந்தார். இன்று காலை தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்தவர்கள் வீரணன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீரணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீரணன் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

    அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    கரூர்

    கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆத்தூர் பிரிவு சாலையில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். ஈரோடு சாலையில் கரூர் அடுத்த காயத்திரி நகர் அருகே சென்ற போது பின்னால் வந்த மணல் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி லாரி டிரைவரை கைது செய்தனர். 

    விசாரணையில் லாரியில் இருந்தது கடத்தல் மணல் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    சித்தோடு அருகே மொபட் விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பவானி:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). தொழிலாளி.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தோடு நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டில் ராமசாமி உள்பட 3 பேர் இருந்தனர். சித்தோடு அருகே உள்ள அமராவதி நகர் பக்கம் சென்றபோது அந்த வழியாக நடந்து சென்ற கோமதி என்ற பெண் மீது மொபட் மோதியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய மொபட்டில் இருந்து ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ராமசாமி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×