search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி மக்கள் நல பணியாளர் சாவு
    X

    மின்சாரம் தாக்கி மக்கள் நல பணியாளர் சாவு

    • கம்பி அறுந்து நிலத்தில் விழுந்து கிடந்தது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த காம்பட்டை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52). இவர் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று சக்கரவர்த்தி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து நிலத்தின் வரப்பில் விழுந்து கிடந்தது. அதனை சக்கரவர்த்தி மிதித்துள்ளார்.

    இதில் அவரை தூக்கி வீசியது இதில் படுகாயம் ஏற்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து சக்கரவர்த்தியின் உடலை பிரேத பரி சோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவ மனை அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×