search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM money robbery"

    ஆம்பூர் அருகே வாகன போக்குவரத்து இருக்கும் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    ஏ.டி.எம். மையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பி விட்டுச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை ஏ.டி.எம். வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    அதன் பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் நிரப்பினர். அதில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என உடனடியாக தெரியவில்லை. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் ஒரே நேரத்தில் 2 ஏ.டி.எம். சென்டர்களில் எந்திரங்களை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளைபோனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் கொரட்டி என்ற இடத்தில் உள்ளது சவுத் இந்தியன் வங்கி. இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். சென்டருக்கு அதிகாலை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பணம் எடுக்க வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வங்கி அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். எந்திரத்தை சோதனை செய்தபோது அதில் இருந்த ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் சத்தம் வராத எந்திரம் மூலம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    இங்கு கொள்ளை நடந்த சில மணி நேரத்திற்கு முன்னதாக கொச்சி திருப்பணித்துறையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். சென்டருக்குள் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    இதே நேரத்தில் கோட்டயம் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கொச்சி சிட்டி போலீஸ் கமி‌ஷனர் தினேஷ் திருப்பணித்துறையில் கொள்ளை போன ஏ.டி.எம். சென்டரில் ஆய்வு செய்தார்.

    கொள்ளையர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் நுரைபோன்ற ஸ்பிரே அடித்து மறைத்துள்ளனர். பின்னர் கடப்பாரை, கட்டிங் எந்திரம் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் உருவம் கேமிராவில் தெளிவாக பதிவாகவில்லை.

    திருச்சூரில் உள்ள ஏ.டி.எம். சென்டர் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் கொள்ளையடித்தது தெளிவாக பதிவாகி உள்ளது. போலீசார் கேமிரா பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோன்று கோட்டயத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டது தெரியவந்தது. அதனை சோதனை செய்தபோது எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பணம் எதுவும் கொள்ளைபோகவில்லை.

    மாநிலத்தில் ஒரே நேரத்தில் 3 ஏ.டி.எம். சென்டரை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளைபோனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சாலக்குடியில் உள்ள ஒரு பள்ளிகூட மைதானத்தில் அனாதையாக ஒரு கார் நின்றது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தியபோது அது வாடகை கார் என்பது தெரியவந்தது.

    மேலும் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநில வாலிபர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
    ஆழ்வார்பேட்டையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest #ATMrobbery

    சென்னை:

    ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோட்டில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைக்க முயன்றனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே கொள்ளை கும்பல் தப்பிச் செல்ல முயன்றது.

    அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் அமைந்தகரையை சேர்ந்த நந்தகுமார், வேலூரை சேர்ந்த குமார் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள், ராடுகள் கைப்பற்றப்பட்டன.

    சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் ஏ.டி.எம். கொள்ளை தடுக்கப்பட்டது. இதனால் அதிலிருந்த பல லட்சம் பணம் தப்பியது.

    பிடிபட்ட 2 பேரும் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னை ராமாபுரத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் கொள்ளையர்கள் சிக்கவில்லை. இந்த கொள்ளை முயற்சியில் பிடிபட்ட 2 பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #arrest #ATMrobbery

    ×